Lyricist Vairamuthu

பூவாசம் புறப்படும் பெண்ணே பாடல் வரிகள்

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்

உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி

பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்

ம்ம்ம்ம் புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து
ஓவியம் உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்

கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே

ஒரு வானம் வரைய நீல வண்ண
நம் காதல் வரைய என்ன வண்ணம்

என் வெட்கத்தின் நிறம் தொட்டு விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா…

பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்

ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது
ஆண்தொடாத பாகம் தன்னில் உள்ளது

நீ வரையத்தெரிந்த ஒரு நவீன கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு நளிந்த கலைஞன்

மேகத்தை ஏமாற்றி மண்சேரும்
மழை போலே மடியோடு விழுந்தாயே வா…

பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்

உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…

Movie: Anbe Sivam
Lyrics: Vairamuthu
Music: Vidyasagar