Lyricist Vairamuthu

பழைய குரல் கேட்கிறதே யாரோ பாடல் வரிகள்

பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ

எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்கும் யாரோ யாரோ

பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ ஆஆ

பகலில் சூரியன் இரவில் நிலவு
இரண்டும் பிழையா இரண்டும் சரியா
இயற்கை தீர்ப்பு சொல்லுமா

எந்த கண்ணால் உலகம் பார்ப்பேன்
நொந்து இளைத்தேன் நூலாக
ரெட்டை பிள்ளையில் எதன் மேல் நேசம்
என்று மயங்கும் தாயாக

துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும்
மரபு எனது வானத்தில் என்னவோ ஏதோ இரண்டு திங்களை இரவு

பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ

கடலில் ஒருவன் கரையில் ஒருவன்
அவனோ உயிரில் இவனோ மனதில்
இரண்டில் எது தான் வெல்லுமோ

சொல்லி முடிக்கும் துயரம் என்றால் சொல்லி இருப்பேன் நானாக
உள்ளுக்குள்ளே மூடி மறைத்தேன் ஊமை கண்ட கனவாக

துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு
எனது வானத்தில் என்னவோ ஏதோ இரண்டு திங்களை இரவு

பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்கும் யாரோ யாரோ…

Movie: Iyarkai
Lyrics: Vairamuhu
Music: Vidyasagar