Lyricist Thamarai

பனி துளி பனி துளி பாடல் வரிகள்

கரு கரு கரு கரு கண்ணு பட்டு வாடிவிடும்
வாசமல்லி சந்தனத்த பூசிவிடுங்க
அடுத்தது அடுத்தது எப்பவுன்னு மாமியாரு கேட்கும்
முன்னே அரை டஜன் பெத்து கொடுங்க

தக தக தக தக தங்க சிலை தவிக்குது
வெக்கத்துல போதும் அத விட்டுவிடுங்க
ஆரிராரோ ஆரிராரோ நாளைக்கின்னு தேவைப்படும்
தாலாட்டுல ஒன்னு ரெண்டு கத்துகொடுங்க

உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ

இது நனவாய் தோன்றும் கனவு
இது காலையில் தோன்றும் நிலவு
இது கண்ணை கண்ணை பறித்து வெளிச்சம் தரும் இரவு

காதலா காதலா எண்ணவும் கூசுதே
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே

உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ

கரு கரு கரு கரு கண்ணு பட்டு வாடிவிடும்
வாசமல்லி சந்தனத்த பூசிவிடுங்க
அடுத்தது அடுத்தது எப்பவுன்னு மாமியாரு கேட்கும்
முன்னே அரை டஜன் பெத்து கொடுங்க

தக தக தக தக தங்க சிலை தவிக்குது
வெக்கத்துல போதும் அத விட்டுவிடுங்க
ஆரிராரோ ஆரிராரோ நாளைக்கின்னு தேவைப்படும்
தாலாட்டுல ஒன்னு ரெண்டு கத்துகொடுங்க

விரல்களும் நகங்களும் தொட்டு கொண்ட நேரங்கள்
எண்ணி அதை பார்த்ததில்லை என்ற போதும் நூறுகள்
ஏதோ ஒரு தென்றல் மோதி மெல்ல மெல்ல மாறினோம்
ஓ… உன்னை நானும் என்னை நீயும் எங்கே என்று தேடினோம்

நம்மை சுற்றி கூட்டம் வந்தும் தனியானோம்
தனிமையில் நெஞ்சுக்குள்ளே பேசலானோம்
பேசும் போதே பேசும் போதே மௌனம் ஆனோம்..

உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ..

முகத்திரைகுள்ளே நின்று கண்ணாம் மூச்சி ஆடினாய்
பொய்யால் ஒரு மாலை கட்டி பூசை செய்து சூடினாய்
நிழல்களின் உள்ளே உள்ள நிஜங்களை தேடினேன்
நீயாய் அதை சொல்வாய் என்று நித்தமும் நான் வாடினேன்

சொல்ல நினைத்தேன் ஆனால் வார்த்தை இல்லை
உன்னை விட்டால் யாரும் எந்தன் சொந்தம் இல்லை
சொந்தம் என்று யாரும் இனி தேவை இல்லை

உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ ஓஓ…

Movie: Kanda Naal Mudhal
Lyrics: Thamarai
Music: Yuvan Shankar Raja