Lyricist Yugabharathi

பல்லாங்குழியின் வட்டம்  பாடல் வரிகள்

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்..
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்..
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்..

கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்.. செவந்தி பூவில் நடுவில் பார்த்தேன்..
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்..
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்தேன் ஒற்றை நாணயம்..

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்..
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்..

அடி காலம் முழுவதும் காத்திருப்பேன்..
நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன்..
அடி ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டும்..
எந்தன் அன்பு சேர்ந்திருக்கும் நெஞ்சில் வைத்து காத்திரு..

தங்க ஆபரணம் ஒன்றும் தேவையில்லை..
இந்த நாணயம் போதாதா..
தழுவும் மனதை குங்கும சிமிழில் பதுக்க முடியாதா..

செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே..
பல சில்லரை சிதறிவிழும்..
செலவு செய்திட நினைத்தால் கூட இதயம் பதறிவிடும்..

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்..
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்..

அட நேற்று நடந்தது நாடகமா.. நீ காசு கொடுதது சூசகமா..
அட ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டு..
என்ன சொல்ல காசு தந்தாய் எண்ணி எண்ணி பார்கிறேன்..

அடி பேரழகே உன்னை சேர்ந்திடவே..
இந்த நாணயம் ஓர் சாட்சி..
இருக்கும் உயிரும் உனக்கு உபயம் எதற்கு ஆராய்ச்சி..

இந்த நாணயத்தில் உன்னை பார்த்திருப்பேன்..
பிறர் பார்க்கவும் விட மாட்டேன்..
கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை இட மாட்டேன்..

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்..
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்..
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்..
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்..

செவந்தி பூவில் நடுவில் பார்த்தேன்..
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்..
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்தேன் ஒற்றை நாணயம்..

Movie: Aanandham
Lyrics: Yugabharathi
Music: S. A. Rajkumar