Lyricist Ilaiyaraaja

பாட்டு சொல்லி பாட சொல்லி பாடல் வரிகள்

பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா 
கேட்டு கொள்ளகிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா 
குங்குமமும் மங்களமும் ஒட்டி வந்த ரெட்டை குழந்தையடி
சந்தனத்து சிந்து ஒன்று கட்டி கொண்டு மெட்டொன்று தந்ததடி

பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா 
கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா

இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன் 
தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன் 
வானவில்லின் வரவுதனை யாா் அறிவாா் 
வாழ்க்கை செல்லும் பாதைதனை யாா் உரைப்பாா்

இருள் தொடங்கிடும் மேற்கு அங்கு இன்னும் இருப்பது எதற்கு 
ஒலி தொடங்கிடும் கிழக்கு உண்டு பொதுவினில் ஒரு விளக்கு
ஒலி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை

பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா 
கேட்டு கொள்ள கிட்ட வந்து மங்கலம் தந்ததம்மா

புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா 
செவி உணர இசையை மனம் உணா்ந்ததம்மா 
இடம் கொடுத்த தெய்வம் அதை அறிந்து கொண்டேன் 
வாழ்த்தி அதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்

அன்று சென்ற இளம் பருவம் அதை எண்ண எண்ண மனம் நிறையும் 
அன்று இழந்தது மீண்டும் எந்தன் கையில் கிடைத்தது வரமே 
அதை கை பிடித்தே தொடா்ந்து செல்வேன் கலக்கமில்லை…

Movie: Azhagi
Lyrics: Ilaiyaraaja
Music: Ilaiyaraaja

Leave a Reply