Lyricist Pa.Vijay

பார்த்துப் பார்த்துக் கண்கள் பாடல் வரிகள்

பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென

தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்

வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்
நீ வருவாயென நீ வருவாயென

பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென

கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் 
உனக்கென தினம்தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென வாசகனாகி விட்டேன்

கவிதை நூலோடு கோலப் புத்தகம் உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன்

ஒரு காகம் காவெனக் கரைந்தாலும் என் வாசல் பார்க்கிறேன்
நீ வருவாயென நீ வருவாயென

பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென

எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும் 
நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட 
கவிதைக்கும் கால்களில்லை

உலகில் பெண்வர்க்கம் நூறு கோடியாம் அதிலே நீ யாரடி
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன் எங்கே உன் காலடி

மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து இரு விழிகள் தேய்கிறேன்
நீ வருவாயென நீ வருவாயென

பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென

தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்

வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்
நீ வருவாயென நீ வருவாயென…

Movie: Nee Varuvai Ena
Lyrics: Pa. Vijay
Music: S. A. Rajkumar

Leave a Reply