Lyricist Vairamuthu

ஒரு பொய்யாவது பாடல் வரிகள்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே 
உன் காதல் நான் தான் என்று 
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே 
உன் காதல் நான் தான் என்று 
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்

பூக்களில் உன்னால் சத்தம் 
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் 
இதைத் தாங்குமா என் நெஞ்சம்…
இதைத் தாங்குமா என் நெஞ்சம்

உண்மையும் பொய்மையும் பக்கம்பக்கம்தான் 
ரொம்பப் பக்கம் பக்கம்தான் 
பாா்த்தால் ரெண்டும் ஒன்றுதான்

பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பாா்க்கும்
கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே 
உன் காதல் நான் தான் என்று 
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்

இரவினைத் திரட்டி…  ஆ… இரவினைத் திரட்டி
கண்மணியின் குழல் செய்தாரோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ…

விண்மீன் விண்மீன் கொண்டு விரலில் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ…

வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ 

ஆனால்… பெண்ணே.. உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ 
காதல்… கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே 
உன் காதல் நான் தான் என்று 
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே 
அருகில் காட்டியது நீதானே   
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே.. 

ஆஆ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம் 
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே 
கங்கை கங்கை ஆற்றை கவிதைகள் கொண்டு தரும் 

காவிரி ஊற்றை கண்ணில் கையில் தந்தவள் நீதானே 
ஆனால்… உயிரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாய் 
கானல் நீரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே 
உன் காதல் நான் தான் என்று 
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே 
உன் காதல் நான் தான் என்று 
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்

பூக்களில் உன்னால் சத்தம் 
அட மௌனத்தில் உன்னால் யுத்தம் 
இதைத் தாங்குமா என் நெஞ்சம்….
தாங்குமா என் நெஞ்சம்…

Movie: Jodi
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman

 

Leave a Reply