Lyricist Vaali

ஒரு மந்தாரப்பூ பாடல் வரிகள்

ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா….ஓ….
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா

ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா….ஓ….
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா

மலையோரம் மாந்தோப்பு மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்

ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா….ஓ….
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா

நித்தம் நித்தம் நான் குளிக்கும் மஞ்சளுக்கு
ஒன்ன விட்டா யாருமில்ல காவலுக்கு

நெஞ்சுக்குள்ள உன்னை வச்சேன் பத்திரமா
நான் ரசிக்கத் தீட்டி வச்சேன் சித்திரமா

உன்னால ராத்திரி தூக்கம் கெட்டுப் போகுது
ஒத்தையில தூங்குனா என் உடம்பு நோவுது
உன்ன விட்டு அஞ்சு நிமிஷம் என்னால் வாழ ஆவாது

ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா….ஓ….
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா

மலையோரம் மாந்தோப்பு மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்….

ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா….ஓ….
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா

வெத்தலைய பாக்கு வச்சு நான் கொடுப்பேன்
நீ சுவைச்சு மிச்சம் மீதி நான் எடுப்பேன்

செம்பெடுத்துப் பால் நிரப்பி நான் கொடுப்பேன்
நீ குடிச்ச மிச்சம் மீதி நான் குடிப்பேன்

ஒண்ணாகச் சேர்ந்துதான் சந்திரனைப் பாக்கணும்
உண்டான ஏக்கத்தை ரெண்டு பேரும் தீர்க்கணும்
நள்ளிரவில் நாம கலந்தா கோழி கூவக் கூடாது

ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா….ஓ….
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா

மலையோரம் மாந்தோப்பு மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்

ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா….ஓ….
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா…

Movie: Chinna Jameen
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja