Ora Kannala Song Lyrics

Movie: Udhayam NH4 (2013)
Music: G. V. Prakash kumar
Lyricists: Gaana Bala
Singers: Gaana Bala

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓரக் கண்ணால என்ன ஓரங்கட்டுறா ஜாட காட்டியே ரொம்ப வாட்டி வதைக்குறா வானவில்லாட்டம் வந்து எட்டி பாக்குறா வளச்சு போட்டேன் டா ஒரு சோக்கு பிகருடா

ஆண்: அரியா வயசுல அளவா சைசுல அன்ன நட நடந்து வர்றா கடலு மண்ணுல

ஆண்: நாலு மொன ரோட்டுல நட ஒரு தினுசுல சத்தம் போட்டு சிக்னல் தர்றா வெள்ளி கொளுசுல

குழு: {லைட் அவுசு வெளிச்சத்த போல காட்டுறாடா ஜாலம் மனசுகுள்ள புள்ளி வச்சு போடுறாடா கோலம்} (2)

ஆண்: ஆஅ.ஆஅ.ஆ..(2)

ஆண்: மாடி வீட்டுல ஒரு புள்ளி மானுடா கெடச்சு போச்சுடா நான் கேட்ட பீசு டா வெள்ளி கொலுசுல புது சத்தம் போட்டு தான் சின்ன மனச தான் அவ வளைச்சு போட்டுட்டா

ஆண்: காதல் பண்ணும் சோக்குல கட்டு மர கேப்புல காசி மேடு கடலு மண்ணுல வீடு கட்டுறா அலையில்லா கடலுல துடுப்பில்லா படகுல ஆடு புலி ஆட்டம் தானே ஆடி காட்டுறா

குழு: {அடக்கி புடிக்க முடியாத வங்கக்கடல் குதிர ஆக்டோபஸ் மீனப் போல வந்துட்டா டா எதிரே} (2)

ஆண்: ஓரக் கண்ணால என்ன ஓரங்கட்டுறா ஜாட காட்டியே ரொம்ப வாட்டி வதைக்குறா வானவில்லாட்டம் வந்து எட்டி பாக்குறா வளச்சு போட்டேன் டா ஒரு சோக்கு பிகருடா

ஆண்: அடிங்க என் மாமன் இங்க லவ் பெயிலுல உக்காந்திருகான் நீ மெட்ராசுல இருந்து வந்து உன் லவ் ஸ்டோரி சொல்லி இங்க சீனு போட்டுட்டு இருக்கியா

ஆண்: சாரி பா தல பேர் என்ன

ஆண்: பிரபு ஏன்

ஆண்: மொத்த டீடைல் குடு

ஆண்: மாயக் கண்ணால பரபுவ மயக்கி பாத்தவ மாட்டித் தவிக்குறா இப்ப வீட்டுச் சிறையில

ஆண்: அந்த பிகரு மொகத்த தான் இவன் பாக்க முடியல அவ வெள்ளி கொலுசுல இப்ப சத்தம் கேட்கல

ஆண்: பாசம் என்னும் வலையில மாட்டிகினு தவிக்குறா ஆதரவா அவளுக்கு அங்கே யாரும் இல்லடா

ஆண்: நாலு பேரு சேந்துட்டா ரெண்டு பேர பிரிச்சுட்டா காதல் என்ன காற்றினிலே கலைந்து போகுமா

குழு: {சோகத்த நீ காத்துல தான் பறக்க விடு நண்பா உன் மச்சான் சேத்து வைப்பான் நீ பீர குடி தெம்பா} (2)