Lyricist Snehan

ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே பாடல் வரிகள்

ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே
என் பைங்கிளி போகக் கண்டீரோ
ஊருக்கே வெளக்கேத்தும் சூரியரே
என் தாமரைப் பூவைக் கண்டீரோ

போன தெச புரியலையே பொசுங்குதடி எம் மனசு
புங்கமரக் கிளை தொங்க தூண்டுதடி என் உசுரு
நெருப்பாற்றில் குளிப்பாட்டி போனாயடி

ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே
என் பைங்கிளி போகக் கண்டீரோ

பட்டா போட்டு என்னைத்தானே
பதிவாக்கி வச்சாளே பாதியிலே வீதி நிறுத்தவா
சிக்கிமுக்கி கண்ணால்தானே தீயை பற்ற வச்சாளே
தீயில் என்னை வாட்டி எடுக்கவா

அவ நாகப் பாம்பா பாஞ்சிருந்தால்
நெனவு தப்பி சாஞ்சிருப்பேன்
அவ சாரல் பாம்பா பாஞ்சதனால்
சிறுக சிறுக சாகுறேனே
கண்ணம்மா மனம் கல்லாம்மா பதில் நீ கூறம்மா

செக்கிழுக்கும் மாட்டைப் போல
என்னைச் சுத்தி வந்தாயே
செக்கில் என்னை ஆட்டி பார்ப்பதேன்
ஈ எறும்ப கொன்னா கூட பாவமுன்னு சொன்னாயே
என்னைக் கொன்னு மண்ணில் புதைப்பதேன்

என் நெஞ்சுல வாளை வீசியிருந்தா
வீர மரணம் கெடைச்சிருக்கும்
என் முதுகுல வாளை வீசியதால்
மானம் இழந்து சாகுறேனே
தாயம்மா இந்த காயம் தான் இனி ஆறாதம்மா
ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ..

ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே
என் பைங்கிளி போகக் கண்டீரோ
ஊருக்கே வெளக்கேத்தும் சூரியரே
என் தாமரைப் பூவைக் கண்டீரோ

போன தெச புரியலையே பொசுங்குதடி எம் மனசு
புங்கமரக் கிளை தொங்க தூண்டுதடி என் உசுரு
நெருப்பாற்றில் குளிப்பாட்டி போனாயடி…

 

Movie: Chokka Thangam
Lyrics:Snehan
Music: Deva
2 thoughts on “Oor Oora Pogira Song Lyrics in Tamil”

Leave a Reply