ஒண்ணும் புரியல பாடல் வரிகள்
ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல ஆசைக் கூடுதே..
உச்சந்தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில சூடு.. ஏறுதே
நெத்திப் பொட்டுத் தெரிக்குது
விட்டு விட்டு ரெக்கை முளைக்குது
நெஞ்சுக் குழி அடைக்குது.. மானே
மனம் புத்தித் தாவியே தறிக் கேட்டு ஓடுது
உயிர் உன்னை சேரவே ஒரு திட்டம் போடுது.. ஹே ஹே.. ஏலே…
ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல ஆசைக் கூடுதே.. தான னன…
அலையிர பேயா அவளது பார்வை என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுர நோயா அவளது வாசம் என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது
அவளது திரு மேனி வெறி கூட்டுது
அவளிடம் அடி வாங்க வழி காட்டுது
அவ என்ன பேசுவா அதை எண்ண தோணுது
அவ எங்க தூங்குவா அதை கண்ணு தேடுது ஹே ஹே.. ஏலே…
ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல ஆசைக் கூடுதே..
தானே.. தன.. தானே.. தன..
கதிர் அருவாளா மனசயும் கீறி துண்டு போடுறா என்ன துண்டு போடுறா
கலவர ஊரா அவ உருமாரி குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா
விழியில பல நூறு படம் காட்டுறா அறுபது நிலவாக ஒளி கூட்டுறா..
அவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது
அவ எட்டி போனதும் அட புத்தி மாறுது ஹே ஹே.. ஏலேலே…
ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல…
Movie: Kumki
Lyrics: Yuga Bharathi
Music: D. Imman