Movie: Andaman Kadhali (1978)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: K. J. Yesudas and Vani Jayaram
Added Date: Feb 11, 2022
ஆண்: நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா.ஆஆ..ஆஆ திருக்கோவிலே ஓடி வா..
ஆண்: நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா.ஆஆ..ஆஆ திருக்கோவிலே ஓடி வா..
ஆண்: நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை வேரின்றி மலரே ஏதம்மா வேரின்றி மலரே ஏதம்மா
ஆண்: நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா
பெண்: ஐயா உன் நினைவேதான் நான் பாடும் ராகங்கள் அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள் கண்ணீரிலே நான் தீட்டினேன் கன்னத்தில் கோலங்கள் கன்னத்தில் கோலங்கள்
ஆண்: செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம் செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம் சம்சாரத் தேரில் நானேறி வந்தேன் திருக்கோவிலே ஓடி வா
பெண்: ஆ..ஆஅ..ஆஅ. திருக்கோவிலே ஓடி வா நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா
ஆண்: முல்லைக்கு குழல் தந்த பெண்மைக்குப் பெண்மை நீ பிள்ளைக்குத் தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ
ஆண்: முல்லைக்கு குழல் தந்த பெண்மைக்குப் பெண்மை நீ பிள்ளைக்குத் தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ அதிகாலையில் நான் கேட்பது நீ பாடும் பூபாளம்
பெண்: என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி செவ்வானம் ஆனேன் உன்னைத்தேடித் தேடி திருக்கோவிலே ஓடி வா
பெண்: ஆ..ஆஅ..ஆஅ. திருக்கோவிலே ஓடிவா நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா
பெண்: ஆ..ஆஅ..ஆஅ..ஆ.. இருவர்: திருக்கோவிலே ஓடி வா..