Lyricist Vairamuthu

நிலா காய்கிறது பாடல் வரிகள்

ஆ…ஆஅ.. ஆஅ…ஆ ஆ…ஆஅ… ஆஅ…ஆ அ.. ஆஅ…ஆஅ…
நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே.
இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்.

தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே. சின்ன கைகள் மட்டும் உன்னை தீண்டும்..

காற்று வீசும் வெய்யில் காயும் காயும் 
அதில் மாற்றம் ஏதும் இல்லையே 
ஆஆ..வானும் மண்ணும் நம்மை வாழ சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லையே என்றென்றும் வானில்…

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே.
இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்

சமகபா பாமப மாகரி சாரி சாநி… சமகபா பாம பமா 
சமகபா பாமப மாகரி கரிசாநி .. சமகபா சதமா
ஆஅ..ஆஆ… ககம நிநிதசா நிதபம ககம நிநிதசா நிதபம

அதோ போகின்றது ஆசை மேகம் மழையை கேட்டுக்கொள்ளுங்கள்
சரிகரிக ககமா இதோ கேட்கின்றது குயிலின் பாடல் 
இசையை கேட்டுக்கொள்ளுங்கள் சரிகரிக ககமா

இந்த பூமியே.. பூவனம் உங்கள் பூக்களை தேடுங்கள்
இந்த வாழ்க்கையே. சீதனம் உந்தன் தேவையை கேளுங்கள்

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே.
இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்.

தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது 
யாரும் சுகிக்கவில்லையே
சின்ன கைகள் மட்டும் உன்னை தீண்டும்.

ஆ…ஆஅ.. ஆஅ…ஆ ஆ…ஆஅ… ஆஅ…ஆ அ.. ஆஅ…ஆஅ…
நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே.
இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்.

தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே. இந்த கைகள் மட்டும் உன்னை தீண்டும்..

காற்று வீசும் வெய்யில் காயும் காயும் 
அதில் மாற்றம் ஏதும் இல்லையே 
ஆஆ..வானும் மண்ணும் நம்மை வாழ சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லையே என்றென்றும் வானில்…

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே.
இந்த கண்கள் மட்டும் உன்னை காணும் ஆ…ஆஅ.. ஆஅ…ஆ ஆ…

Movie: Indira
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman

Leave a Reply