Lyricist Vairamuthu

நீ காற்று நான் மரம் பாடல் வரிகள்

நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்.

நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்
நீ இரவு நான் விண்மீன் நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்
நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ அலை நான் கரை என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்.
நீ உடல் நான் நிழல் நீ விழ வேண்டாம் நான் விழுவேன் நீ கிளை நான் இலை
உன்னை ஒட்டும் வரைக்கும் தான் உயிர்தருகிறேன்

நீ விழி நான் இமை உன்னை சேரும் வரைக்கும் நான் துடித்து இருப்பேன்
நீ சுவாசம் நான் தேகம் நான் உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்
நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ வானம் நான் நீலம் உன்னில் நானாய் கலந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில் நான் குயில் உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன்

நீ உடை நான் இடை உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன்

நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்

நீ இரவு நான் விண்மீன் நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்
நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் ம் ம்…

Movie: Nilaave Vaa
Lyrics: Vairamuthu
Music: Vidyasagar