Lyricist Vaali

நீ எங்கே என் அன்பே பாடல் வரிகள்

நீ எங்கே என் அன்பே.. மீண்டும் மீண்டும் மீண்டும்..
நீ தான் இங்கு வேண்டும்..

நீ எங்கே என் அன்பே.. நீ இன்றி நான் எங்கே..
மீண்டும் மீண்டும் மீண்டும்.. நீ தான் இங்கு வேண்டும்..
உந்தன் அன்பு இல்லாது.. எந்தன் ஜீவன் நில்லாது..
நீ எங்கே என் அன்பே.. நீ இன்றி நான் எங்கே..

விடிகிற வரையினில் கதைகளைப் படித்தது
நினைத்ததே நினைத்ததே..
முடிகிற கதையினை தொடர்ந்திட மனம்
இங்கு துடிக்குதே துடிக்குதே..

கதையிலே கனவிலே உறவுகள்
உணர்வுகள் உருகுதே உருகுதே..
பிழை இல்லை வழி இல்லை அருவிகள்

விழிகளில் பெருகுதே பெருகுதே.. வாழும் போது ஒன்றாக..
வாழ வேண்டும் வா வா..
விடியும் போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வாவா..
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது..

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ.. ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ.. ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ..

வீதி என்று வெட்ட வெலி பொட்டலென்று
வெண்ணிலவு பார்க்குமா பார்க்குமா..
வீடு என்று மொட்டை சுடுக்காடு என்றும்
தென்றல் இங்கு பார்க்குமா பார்க்குமா..

எட்டனென்றும் ஏழை பணக்காரன் என்றும்
ஓடும் ரத்தம் பார்க்குமா பார்க்குமா..
பித்தன் என்றும் பிச்சை போடும் பக்தன் என்றும்
உண்மை தெய்வம் பார்க்குமா பார்க்குமா..

காதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றும் உண்டு
கதைகள் இங்கு முடியாது மீண்டும் தொடரட்டும் இங்கு
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது..

நீ எங்கே என் அன்பே.. நீ இன்றி நான் எங்கே..
மீண்டும் மீண்டும் மீண்டும்.. நீ தான் இங்கு வேண்டும்..
உந்தன் அன்பு இல்லாது.. எந்தன் ஜீவன் நில்லாது..
நீ எங்கே என் அன்பே.. நீ இன்றி நான் எங்கே..

Movie: Chinna Thambi
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja