Nallathor Veenai Seidhe Song Lyrics

Movie: Varumayin Niram Sigappu (1980)
Music: M. S. Vishwanathan
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ.ஓ.. நல்லதோர் வீணை செய்தே

ஆண்: சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் சொல்லடி சிவசக்தி.

ஆண்: நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ.ஓ.. நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ.

ஆண்: சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

ஆண்: வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே

ஆண்: சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் நில சுமை என வாழ்ந்திட புரிகுவையோ

ஆண்: நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ.ஓ..

ஆண்: விசையுறு பந்தினை போல் ஆஆ.ஆஅ..ஆஆ..ஆஅ..ஆஅ.. ஆஅ.ஆஅ..ஆஅ.ஆ.ஆ..ஆஅ.ஆஅ.ஆஆஅ. விசையுறு பந்தினை போல் உள்ளம் வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன் நசையறு மனம் கேட்டேன் நித்தம் நவமென சுடர் தரும் உயிர் கேட்டேன்.உயிர் கேட்டேன். உயிர் கேட்டேன்..ஏ..ஏ..ஏ..

ஆண்: தசையினை தீ சுடினும் சிவ சக்தியை பாடும் நல் அகம் கேட்டேன் அசைவுறு மதி கேட்டேன் இவை அருள்வதில் உனக்கேதும் தடை உள்ளதோ இவை அருள்வதில் உனக்கேதும் தடை உள்ளதோ..ஓ.ஓ.ஓ.

ஆண்: நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ. நல்லதோர் வீணை செய்தே ஆஅ.ஆஅ..ஆஅ..