Lyricist R.V. Udayakumar

முத்து மணி மாலை பாடல் வரிகள்

முத்து மணி மாலை உன்னத் தொட்டுத் 
தொட்டுத் தாலாட்ட 

வெட்கத்துல சேலை கொஞ்சம் விட்டு
விட்டுப் போராட

உள்ளத்தில நீதானே உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப் பூதானே புது சந்தனமும் நீதானே

முத்து மணி மாலை உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

கொலுசுதான் மெளனமாகுமா 
மனசு தான் பேசுமா

மேகம் தான் நிலவை மூடுமா
மவுசு தான் குறையுமா-

நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே

வாக்கப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே

தாழம்பூவுல வீசும் காத்துல
வாசம் தேடி மாமா வா

முத்து மணி மாலை என்னத் தொட்டுத் 
தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை கொஞ்சம் 
விட்டுவிட்டுப் போராட

காலிலே போட்ட மிஞ்சி தான் காதுல பேசுதே
கழுத்துல போட்ட தாலி தான் காவியம் பாடுதே

நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில்
பொட்டுவச்சதாரு நான்தானே

அத்திமரப்பூவும் அச்சப்படுமா 
பக்கத்துணையாரு நீதானே

ஆசை பேச்சுல பாதி மூச்சுல 
லேசா தேகம் சூடேற

முத்து மணிமாலை என்னைத் தொட்டுத் 
தொட்டுத் தாலாட்ட 

வெட்கத்துல சேலை கொஞ்சம் 
விட்டுவிட்டுப் போராட

உள்ளத்தில நீ தானே உத்தமனும் நீதானே
இது நந்தவனப் பூ தானே புது சந்தனமும் நீதானே

ஒரு நந்தவனப் பூ தானே  புது சந்தனமும் நீதானே…

Movie: Chinna Gounder
Lyrics: R. V. Udayakumar
Music: Ilaiyaraaja

Leave a Reply