Moonu Vela Soru Song Lyrics

Movie: Vaazhga Valarga (1987)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: மூணு வேளை சோறு போடலாம்.. ராணியாக என்னை ஆக்கலாம்…

பெண்: மூணு வேளை சோறு போடலாம்.. ராணியாக என்னை ஆக்கலாம்… நெஞ்சத்திலே நிம்மதிய மாமா நெஞ்சத்திலே நிம்மதிய மாமா அள்ளித் தர உன்னாலத்தான் ஆகுமா

பெண்: மூணு வேளை சோறு போடலாம்.. ராணியாக என்னை ஆக்கலாம்…

பெண்: {வேலியில சிக்கிக்கிட்டு வேதனையப் பட்டுக்கிட்டேன் தாலியில்ல பொட்டுமில்ல புள்ளக்கூட பெத்துக்கிட்டேன்} (2)

பெண்: ஊருசனம் காலடியில் என் பொழப்பதான் மிதிக்கும் ஊருக்குள்ள காத்தடிச்சா எங்க கதத்தான் பறக்கும் இங்கிலாந்து ராணியென்ன அம்மனான சாமியென்ன ஆம்பளையின் கையில் அவளும் அடங்கித்தானே போகவேண்டும் ஏழைப் பொண்ணு என்னக் கூட ராணியாக பாக்கும் மாமா நெஞ்சத்திலே நிம்மதிய மாமா அள்ளித் தர உன்னாலத்தான் ஆகுமா

பெண்: மூணு வேளை சோறு போடலாம்.. ராணியாக என்னை ஆக்கலாம்… மூணு வேளை சோறு போடலாம்.. ராணியாக என்னை ஆக்கலாம்…

பெண்: {ஊரச்சுத்தும் கன்னுக்குட்டி சேந்துக்கிட்ட ஆட்டுக்குட்டி உன்ன இப்ப விட்டுப்புட்டு ஊரு மேய போவதென்ன} (2)

பெண்: நான் புடிச்ச கன்னுக்குட்டி அது புடிச்ச ஆட்டுக்குட்டி வட்டம் போட்டு வந்ததென்ன கைய விட்டு போனதென்ன கைத்துணையா யாருமில்ல தாயும் ஒண்ணு பிள்ளையும் ஒண்ணு ஆத்துக்குள்ள போகுதம்மா காகிதத்துப் பரிசல் மேலே யாரு கதை எனக்கெதுக்கு என் கதைய கேட்டுப் பாரு நெஞ்சத்திலே நிம்மதிய மாமா அள்ளித் தர உன்னாலத்தான் ஆகுமா

பெண்: மூணு வேளை சோறு போடலாம்.. ராணியாக என்னை ஆக்கலாம்… மூணு வேளை சோறு போடலாம்.. ராணியாக என்னை ஆக்கலாம்… நெஞ்சத்திலே நிம்மதிய மாமா நெஞ்சத்திலே நிம்மதிய மாமா அள்ளித் தர உன்னாலத்தான்