Mangiyathor Nilavinile Song Lyrics

Movie: Thirumanam (1958)
Music: S. M. Subbaih Naidu and T. G. Lingappa
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: மங்கியதோர் நிலவினிலே…ஏ…ஏ.. கனவில் இது கண்டேன்…ஏன்..ன்..கண்டேன்

ஆண்: மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன் மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன்

ஆண்: வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை பொங்கி வரும் பெருநிலவு போன்ற ஒளிமுகமும் புன்னகையின் புது நிலவும் போற்ற வரும் தோற்றம்

ஆண்: மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன்

ஆண்: துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள் அங்கதனிற் கண் விழித்தேன் அடடா ஓ அடடா அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன்

ஆண்: மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன்

ஆண்: காலத்தின் விதி மதியை கடந்திடுமோ என்றேன்…ஏ…ஏ…ஏ.. காலத்தின் விதி மதியை கடந்திடுமோ என்றேன் காலமே மதியினுக்கோர் கருவியான் என்றாள் ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன் நாளிலே ஒன்றிருண்டு பழித்திடலாம் என்றேன்

ஆண்: மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன்

ஆண்: ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை என்றேன் எண்ணினால் எண்ணியது நண்ணுங்கானென்றாள் மூலத்தைச் சொல்லவோ வேண்டாமோ என்றேன் முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்

ஆண்: மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன்