மல்லிகைப் பூவே பாடல் வரிகள்
மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
ஆயிரம் கோடிகள் செல்வம் அது யாருக்கு இங்கே வேண்டும்
அரை நொடி என்றால் கூட இந்த ஆனந்தம் ஒன்றே போதும்
பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
சின்ன சின்ன கைகளிலே வண்ணம் சிந்தும் ரோஜாப்பூ
சிரித்து பேசி விளையாடும் நெஞ்சம் எங்கும் மத்தாப்பூ
இன்னும் அந்தி வானில் பச்சைக்கிளி கூட்டம் என்ன சொல்லி பறக்கிறது
மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாய
நம்மை கண்டு நானி இன்னும் கொஞ்ச தூரம் தள்ளி தள்ளி போகிறது
எங்களின் கதை கேட்டு தலையாட்டுது தாமரைப்பூ
மயிலே நாம் ஆடிய கதையை நீ பேசு
மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
அலைகள் வந்து மோதாமல் கடலின் கரைகள் கிடையாது
எந்த அலைகள் வந்தாலும் எங்கள் சொந்தம் உடையாது
சுற்றி சுற்றி வருதே பட்டு தென்றல் காற்று இங்கு என்ன பார்க்கிறது
மொட்டு விடும் மலரை காஞ்சி பட்டு நூலில் கட்டி தர கேட்கிறது
வேலிகள் கிடையாது எந்த வெள்ளமும் நெருங்காது
நிலவே இது கொஞ்சும் கிளிகளின் இசைப்பாட்டு
மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
ஆயிரம் கோடிகள் செல்வம் அது யாருக்கு இங்கே வேண்டும்
அரை நொடி என்றால் கூட இந்த ஆனந்தம் ஒன்றே போதும்
பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
Movie: Unnidathil Ennai Koduthen
Lyrics: Thamarai
Music: S. A. Rajkumar