Lyricist Kannadasan

மலர் கொடுத்தேன் பாடல் வரிகள்

மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன்
மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா… ஓ…
என்னையும் தாலாட்டம்மா

மகனோ மகளோ பிறக்கும் என் வீடு நலமாக
மடியில் தவழும் உருவம் என் தந்தை முகமாக
இது ஒரு சீராட்டம்மா…..ஓ….
என்னையும் தாலாட்டம்மா

அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ
அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ

அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ
அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ

மாதங்கள் பதமாக உருவானதோ மகராணி முகம் இங்கு மெருகேருதோ
ஆடாத பொன்னூஞ்சல் ஆடு பாடாத தென்பாங்கு பாடு

மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா…..ஓ….
என்னையும் தாலாட்டம்மா…

Movie: Thirisoolam
Lyrics: Kannadasan
Music: M. S. Viswanathan