Lyricist Vaali

மலையோரம் வீசும் பாடல் வரிகள்

மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா

ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த பாட்டு தானம்மா

மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா

வான் பறந்த தேன்சிட்டு நான் புடிக்க வாராதா
கள்ளிருக்கும் ரோசாப்பூ கைகலக்க கூடாதா
ராபோது ஆனா உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட ஆகாதா ஆணா

உள் மூச்சு வாங்கினேனே முள்மீது தூங்கினேனே
இல்லாத பாரம் எல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே
நிலாவ நாளும் தேடும் வானம் நான்

மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா

குத்தாலத்து தேனருவி சித்தாடை தான் கட்டாதா
சித்தாடைய கட்டி எழ கையில் வந்து கிட்டாதா

ஆத்தோரம் நாண பூங்காத்தோடு ஆட
ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட

இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீ இருந்து என் மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான்

மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா

ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த பாட்டு தானம்மா

மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா…

Movie: Paadu Nilave
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja