Lyricist Pa.Vijay

மதுரைக்கு போகாதடி பாடல் வரிகள்

கற்பூர கன்னிகையே வாராய்
அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்
நீ வாங்கள மகராணியே… வலது காலையெடுத்து வாராய் நீயே
நீ வந்த இடம் வளமாக சென்ற இடம் வளமாக
சேர்ந்த இடம் சுகமாக வாழப்போற…

மதுரைக்கு போகாதடி.. அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்
தஞ்சாவூரு போகாதடி தலையாட்டாம பொம்ம நிக்கும் 
தூத்துக்குடி போனா சில கப்பல் கரை தட்டும்
கொடைக்கானல் போனா அங்க மேகம் உன்ன சுத்தும்

அசருது அசருது ஊர் மொத்தம்மா
அதுயென்ன அதுயென்ன உன் குத்தம்மா
அசருது அசருது ஊர் மொத்தம்மா
அதுயென்ன அதுயென்ன உன் குத்தம்மா

கற்பூர கன்னிகையே வாராய்
அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்
நீ வாங்கள மகராணியே… வலது காலையெடுத்து வாராய் நீயே..

அடி ஒத்தையில தனியாக மெத்தையில தூங்காத
அத்தை மகன் வாரான்டி களைச்சுப் போக
மதுரைக்கு போகாதடி.. அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்..

சித்திரையினா வெயில் அடிக்கும் கார்த்திகையினா மழையடிக்கும்
அடாா் புடாா் கடாா் தடாா் மாப்பிள்ளைதான் தங்கம்
ஆடியின்னா காத்தடிக்கும் மார்கழின்னா
ஹா ஹா ஹா டமால் டமால் கபால் கபால் மாப்பிள்ளைதான் சிங்கம்

ஓ… மருதானி தோட்டதுக்கே அட மருதானி யாரு வச்சா
ஹோ தேரா தேரா இவன் வாரான் வாரா 

ஹோ.. காட்டு குயிலு கட்டிக்கத்தான் தமிழ்நாட்டு புயலும் வந்திருச்சு
ஹோ ஜோரா ஜோரா வரும் வீரா வீரா

நா அக்கரையில் இருந்தாலும் இக்கரையில் இருந்தாலும்
சக்கரையா இருப்பாளே ஆசையாலே
மதுரைக்கு போகாதடி.. அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்..

அசருது அசருது ஊர் மொத்தம்மா
அதுயென்ன அதுயென்ன உன் குத்தம்மா

மருமக மருமக வந்தாச்சம்மா 
இனி மாமியாரு பதவிதான் உனக்காச்சம்மா

தமிழ்நாட்டு மன்மதனே வாராய் 
பெண் மயங்க மயங்க நடந்து நடந்து வாராய்

நீ இந்திர மகாராஜனே… வெற்றி மாலைக்கினே பிறந்தவனே
நீ தொட்டதெல்லாம் ஜெயமாக சொன்னதெல்லாம் நிஜமாக
கன்னி நிலா வந்திருச்சு கனவுகாண

ஓ… கெட்டிமேளம் நாதஸ்வரம் அது சேந்து கேட்கும் நேரம் சுகம்
டும் டும் டும் டும் டுடு டுடு டும் டும் டும் டும்

ஓ… மஞ்சள் குங்குமம் தாலியின் சிறப்பு
பெண்களுக்கெல்லாம் இன்னொரு பொறப்பு
டும் டும் டும் டும் டும் டும் டும் டுடும் டுடும் டும் டும் டும் டும்

ஓ சந்திரனில் ஒரு பாதி இந்திரனில் ஒரு பாதி
சுந்தரனே என்ஜோடி ஆனதென்ன…

மதுரைக்கு போகாதடி… அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்..
மதுரைக்கு போக மாட்டேன்… என் மல்லிப்பூ உன் கையிலே..

தஞ்சாவூரு போகாதடி… தலையாட்டாம பொம்ம நிக்கும்
எங்கும் போகமாட்டேன் உன் முன்னாலதான் நிப்பேன்
முன்னால் வந்து நின்னு என் கண்ணால் சுத்த வைப்பேன்

அசருது அசருது ஊர் மொத்தம்மா
அதுயென்ன அதுயென்ன உன் குத்தம்மா

அசருது அசருது ஊர் மொத்தம்மா
அதுயென்ன அதுயென்ன உன் குத்தம்மா

அசருது அசருது ஊர் மொத்தம்மா
அதுயென்ன அதுயென்ன உன் குத்தம்மா

அசருது அசருது ஊர் மொத்தம்மா
அதுயென்ன அதுயென்ன உன் குத்தம்மா…

Movie: Azhagiya Tamil Magan
Lyrics: Pa. Vijay
Music: A. R. Rahman

Leave a Reply