Movie: Kumaripennin Ullathile (1980)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: S. Janaki and P. Jayachandran

Added Date: Feb 11, 2022

ஆண்: மதுக் கடலோ. மரகத ரதமோ மதன் விடும் கணையோ மழை முகில் விழியோ கனி இதழ் சுவை தனில் போதை ஊட்டும் கோதை மனம் கவர் ராதை நீயே சீதை… போதை ஊட்டும் கோதை மனம் கவர் ராதை நீயே சீதை…

பெண்: மதுக் கடலோ.ஓ மரகத ரதமோ மதன் விடும் கணையோ மழை முகில் விழியோ கனி இதழ் சுவை தனில் போதை ஊட்டும் கோதை மனம் கவர் ராதை

ஆண்: நீயே சீதை…

ஆண்: கண்ணாலே உனைப் பார்த்த நேரம் இன்று என் வாழ்வில் ராஜயோகம்
பெண்: ஆ. ஆ. உன் வாசல் நான் தேடி வந்தேன் நெஞ்சில் பொன் வீணை மீட்ட வந்தேன்

ஆண்: உன்னைப் பார்த்தாலே உண்டாகும் வேகம்
பெண்: ஆஅ .
ஆண்: உன்னைப் பார்த்தாலே உண்டாகும் வேகம் உந்தன் பார்வை புது மோக ராகம்

பெண்: மதுக் கடலோ. ஓ. மரகத ரதமோ மதன் விடும் கணையோ மழை முகில் விழியோ கனி இதழ் சுவை தனில் போதை ஊட்டும் கோதை மனம் கவர் ராதை நானே சீதை போதை ஊட்டும் கோதை மனம் கவர் ராதை நானே சீதை

பெண்: கள்ளூறும் ரோஜாவைப் பாராய் தொட்டு விளையாட ஓடி வாராய்
ஆண்: ஆ. ஆ. உன் கூந்தல் நிழலோரம் நானே கொஞ்சம் இளைப்பாற வேண்டும் மானே

பெண்: உந்தன் தோள் மீது கிளியாக வேண்டும் உந்தன் தோள் மீது கிளியாக வேண்டும் உந்தன் மார்பில் உறவாட வேண்டும்…

ஆண்: மதுக் கடலோ. ஓ.
பெண்: மரகத ரதமோ
ஆண்: மதன் விடும் கணையோ
பெண்: மழை முகில் விழியோ
ஆண்: கனி இதழ் சுவை தனில் போதை ஊட்டும் கோதை
பெண்: மனம் கவர் ராதை நானே சீதை
ஆண்: போதை ஊட்டும் கோதை
பெண்: மனம் கவர் ராதை நானே சீதை