Ladukio Song Lyrics

Movie: Saithan (2016)
Music: Vijay Antony
Lyricists: Annamalai
Singers: Vijay Antony and Yazin Nizar

Added Date: Feb 11, 2022

ஆண்: லடு லடு லடு லடுக்கியோ லடு லடு லடு லடுக்கியோ லடு லக்கியோ லடு லக்கியோ லடுக்கியோ லடுக்கியோ

ஆண்: நான் சுட சுட நனைகிறேன் நீ தொட தொட கலைகிறேன் உருகுகிறேன் மருகுகிறேன் உன்னிடம் தொலைகிறேன்

ஆண்: என் உயிரின் உயிராக எனக்குள் வந்து நிறைந்தாயே என் கடலின் துளியாக எனக்குள் கலந்தாயே

ஆண்: உன் பகலில் நிழலாக தினம் தினம் நானும் வருவேனே உன் இரவில் நெருப்பாக உன்னை சுடுவேனே

ஆண்: நான் சுட சுட நனைகிறேன் நீ தொட தொட கலைகிறேன் ஹே உருகுகிறேன் மருகுகிறேன் உன்னிடம் தொலைகிறேன்

ஆண்: லடு லடு லடு லடுக்கியோ லடு லடு லடு லடுக்கியோ லடு லக்கியோ லடு லக்கியோ லடுக்கியோ லடுக்கியோ ஓ

ஆண்: பிடித்தவள் அருகில் இருக்கும் போது எதையும் பிடிக்க வில்லை உன் உள்ளங்கைகள் தலையணை ஆகுது உறக்கம் வரவும் இல்லை

ஆண்: என் பேர் சொல்லி யாரும் அழைத்தால் திரும்பி பார்ப்பதில்லை உன் பேரை சொன்னால் திரும்பும் கழுத்தை தடுக்க முடிய வில்லை

ஆண்: என் விருப்பம் அது உன் நெருக்கம் வேர் ஒன்றும் தேவை இல்லை நீ அருகில் இருந்தால் போதும்

ஆண்: விழி திரையில் திரை படமாய் உன் உருவம் ஓடுது அன்பே என்னை பிரிந்து விடாதே நீயும்

ஆண்: லடு லடு லடு லடுக்கியோ லடு லடு லடு லடுக்கியோ லடு லக்கியோ லடு லக்கியோ லடுக்கியோ லடுக்கியோ

ஆண்: நான் சுட சுட நனைகிறேன் நீ தொட தொட கலைகிறேன் உருகுகிறேன் மருகுகிறேன் உன்னிடம் தொலைகிறேன்

குழு: ………..

ஆண்: நான் தூங்கும் வேலை கூட உந்தன் ஞாபகம் உறங்கவில்லை என் ஒரு நொடி கூட விழிகளை விட்டு உன் முகம் கலைய வில்லை

ஆண்: உன் கண் இமை நடுவில் வாழ்ந்திடும் போது கவலைகள் ஏதும் இல்லை என் கை தொடும் தூரம் நீ இருப்பதும் கடவுளும் தேவை இல்லை

ஆண்: என் விழியில் இனி உன் கனவு நாம் இங்கே வேறு இல்லை நீ குளித்தால் எனக்கும் ஈரம்

ஆண்: முழு இரவும் வரும் பகல் முழுதும் பிரியாமல் வாழ வேண்டும் உன் பிரியம் மட்டும் போதும்

ஆண்: லடு லடு லடு லடுக்கியோ லடு லடு லடு லடுக்கியோ லடு லக்கியோ லடு லக்கியோ லடுக்கியோ லடுக்கியோ

ஆண்: நான் சுட சுட நனைகிறேன் நீ தொட தொட கலைகிறேன் உருகுகிறேன் மருகுகிறேன் உன்னிடம் தொலைகிறேன்

ஆண்: என் உயிரின் உயிராக எனக்குள் வந்து நிறைந்தாயே என் கடலின் துளியாக எனக்குள் கலந்தாயே

ஆண்: உன் பகலில் நிழலாக தினம் தினம் நானும் வருவேனே உன் இரவில் நெருப்பாக உன்னை சுடுவேனே