Lyricist Vairamuthu

கனவு காணும் வாழ்க்கை யாவும் பாடல் வரிகள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்

துடுப்புக்கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்

பிறக்கின்ற போதே பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி இருக்கின்ற தென்பது மெய்தானே

ஆசைகள் என்ன… ஆசைகள் என்ன ஆணவம்
என்ன உறவுகள் என்பதும் பொய்தானே

உடம்பு என்பது… உடம்பு என்பது உண்மையில்
என்ன கனவுகள் வாங்கும் பை தானே

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள் துடுப்புக்கூட
பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்

காலங்கள் மாறும் காலங்கள் மாறும் கோலங்கள்
மாறும் வாலிபம் என்பது பொய் வேஷம்

தூக்கத்தில் பாதி… தூக்கத்தில் பாதி ஏக்கத்தில்
பாதி போனது போக ஏது மீதம்

பேதை மனிதனே… பேதை மனிதனே கடமைகள்
இன்றே செய்வதில் தானே ஆனந்தம்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள் துடுப்புக்கூட
பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்…

Movie: Neengal Kettavai
Lyrics: Vairamuthu
Music: Ilaiyaraaja

Leave a Reply