Lyricist Vairamuthu

கனவா இல்லை காற்றா பாடல் வரிகள்

கனவா இல்லை காற்றா கனவா நீ காற்றா
கையில் மிதக்கும் கனவா நீ கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே நுரையால் செய்த சிலையா நீ

இப்படி உன்னை ஏந்தி கொண்டே இந்திர லோகம் போய் விடவா
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும் சந்திர தரையில் பாயிடவா.

கையில் மிதக்கும் கனவா நீ கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே நுரையால் செய்த சிலையா நீ

நிலவில் பொருள்கள் எடை இழக்கும் நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும் இன்று கண்டேனடி அதை கண்டு கொண்டேனடி

நிலவில் பொருள்கள் எடை இழக்கும் நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும் இன்று கண்டேனடி அதை கண்டு கொண்டேனடி

காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது..
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால் பசியோ வலியோ தெரியாது

காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது..
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால் பசியோ வலியோ தெரியாது

உன்னை மட்டும் சுமந்து நடந்தால் உயரம் தூரம் தெரியாது
உன்னை மட்டும் சுமந்து நடந்தால் உயரம் தூரம் தெரியாது

உன் மேல் வந்தொரு பூ விழுந்தால் என்னால் தாங்க முடியாது

கையில் மிதக்கும் கனவா நீ கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே. நுரையால் செய்த சிலையா நீ
கனவா.. நீ காற்றா… கனவா.. நீ காற்றா…

Movie: Ratchagan
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman