காலையில் கேட்டது பாடல் வரிகள்
ஆ… ஹ… ஹ…ஹ…ஆ… ஆ…ஆ… ஹ……ஹ… ஹ…
ஆ… ஆ… ஆ… ஹ..ஹா… ஆ…ஹ… ஹ… ஹ… ஆ… ஆ… ஆ… ஹ… ஹா
காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
பாதையில் ஏதோ ஒரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல்கனி
காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ
மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ
தேவனின் கைவிரல் பாவை மேல் பட்டது
தேவியின் கண்விழி பானம்தான் விட்டது
புதுவித அனுபவம் அஹ ஆ…..அஹஹா….
முதல் முதல் அறிமுகம் ஓஹ் ஓஹஹொ
புதுவித அனுபவம் முதல் முதல் அறிமுகம்
தேனும் பாலும் தொட தொட ஊறுது
காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
பாதையில் ஏதோ ஒரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல்கனி
காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
இம்… இம்… இம்… இம்… இம்… இம்…
இம்… இம்… இம்… இம்… இம்… இம்…
தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி
தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி
ஏக்கமா கண்மணி காய்ந்ததோ செவ்விழி
காதலா என் மனம் சேர்ந்ததே உன் வழி
ரகசியம் புரிந்தது அஹ ஆ…..அஹஹா….
அதிசயம் தெரிந்தது ஓஹ் ஓஹஹொ
ரகசியம் புரிந்தது அதிசயம் தெரிந்தது
காற்றும் பூவும் கலந்துறவாடுது
காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
பாதையில் ஏதோ ஒரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல்கனி
காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…
Movie: Senthamizh Paattu
Lyrics: Vaali
Music: M. S. Viswanathan