காதலியே காதலியே பாடல் வரிகள்
காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்
எத்தனையோ பெண்களிலே எனக்கென்ன ஏன் பிறந்தாய்
இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ
பட்டாம் பூச்சி குளிக்கும் போது சாயம் போகுமோ
கண்ணும் கண்ணும் மோதும் போது காயம் ஆகுமோ
கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன
தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்
காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்
எத்தனையோ பெண்களிலே எனக்கென்ன ஏன் பிறந்தாய்
உள்ளங்கையில் தேடி பார்த்தேன் ஆயுள் ரேகை இல்லையே
கனவு மட்டும் எனக்கு உண்டு கண்ணை காண வில்லையே
கடற்கரை மணலில் எல்லாம் காதல் ஜோடி கால் தடம்
எந்தன் பாதம் எங்கே வைப்பேன் வந்து சொல்வாய் என்னிடம்
ஒரு வீணை கைகளில் கொடுத்து என் விரல்களை ஏன் அடி பறித்து விட்டாய்
ஒரு காதல் நாடகம் நடத்தி அடி நீ என்னை திரை இட்டு மறைத்தாய்
கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன
தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்
தூங்கும் போது கண்கள் ரெண்டும் போர்வை கேட்க கூடுமோ
தண்ணீர் மீது பூக்கும் பூக்கள் காய்ச்சல் வந்து சாகுமோ
இறந்து போன காதல் கவிதை இரங்கல் கூட்டம் போடுதோ
எனக்குள் இருக்கும் உந்தன் இதயம் எகிறி குதித்து ஓடுதோ
ஒரு சுதந்திர கிளியாய் பறந்தேன்
என்னை ஜோசிய கிளியாய் சிறை எடுத்தாய்
ஒரு வாரத்தில் ஏழேழு நாட்கள் என் காதல் விடுமுறை நாளோ
கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன
தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்
காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்
எத்தனையோ பெண்களிலே எனக்கென்ன ஏன் பிறந்தாய்
இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ
பட்டாம் பூச்சி குளிக்கும் போது சாயம் போகுமோ
கண்ணும் கண்ணும் மோதும் போது காயம் ஆகுமோ…
Movie: Jithan
Lyrics: Kabilan
Music: Srikanth Deva