Lyricist Na. Muthukumar

காதல் வைத்து காதல் வைத்து பாடல் வரிகள்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன் நடந்தாய் திசை அறிந்தேன்

காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன்

காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன்

தேவதை கதை கேட்ட போதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்புதான் 
நம்பி விட்டேன் மறுக்கவில்லை

அதி காலை விடிவதெல்லாம் உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான் 
அந்தி மாலை மறைவதெல்லாம் உன்னை பார்த்த கிறக்கத்தில் தான்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன்

உன்னை கண்ட நாள் ஒளிவட்டம் போல் உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம் உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேச வைத்தாய் கடிகாரம் வீச வைத்தாய் 
மழையோடு குளிக்க வைத்தாய் வெயில் கூட ரசிக்க வைத்தாய் 

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன் நடந்தாய் திசை அறிந்தேன்

காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்

அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன் 
அழகாய் அய்யோ தொலைந்தேன்…

Movie: Deepavali
Lyrics: Na. Muthu Kumar
Music: Yuvan Shankar Raja

Leave a Reply