Lyricist Vairamuthu

காற்றில் ஓர் வார்தை பாடல் வரிகள்

காற்றில் ஓர் வார்தை.. மிதந்து வர கண்டேன்
அதை நான் வாங்கி.. கவிதை செய்து கொண்டேன்

ஹே ஹே சிநேகிதா ஹே ஹே சிநேகிதா ஹே ஹே சிநேகிதா
காற்றில் ஓர் வார்தை.. மிதந்து வர கண்டேன்
அதை நான் வாங்கி.. கவிதை செய்து கொண்டேன்

கண்களை தொலைத்து விட்டு.. கைகலால் துலாவி வந்தேன்
மண்ணிலே கிடந்த கண்ணை.. இன்றுதான் அறிந்து கொண்டேன்
உன் கண்ணில் தான்… கண் விழிப்பேன்..

ஹே ஹே சிநேகிதா ஹே ஹே சிநேகிதா ஹே ஹே சிநேகிதா
காற்றில் ஓர் வார்தை.. மிதந்து வர கண்டேன்
ஸ்நேகிதி .. ஆஹா ஸ்நேகிதி..

சுற்றி என்னை துரத்தும் துயரமடி..
என்னை நெற்றி பொட்டுக்கடியில் வைத்துக்கொள்ளடி

நெற்றி பொட்டு உதிர்ந்தால் வெயிலடிக்கும்
உன்னை நெஞ்சுக்குள்ளே மறைப்பாள் இளையக்கொடி

மருந்துகள் இல்லா தேசதில் கூட மைவிழி பார்வைகள் போதும்
கவிதைகள் இல்லா மொழிகளில் கூட காதலன் புன்னகை போதும்

உலகங்கள் ஏழும் பனி மூடும் போதும்
உன் மார்பின் வெப்பம் போதும்
ஹே ஹே சிநேகிதா ஹே ஹே சிநேகிதா ஹே ஹே சிநேகிதா

காற்றில் ஓர் வார்தை.. மிதந்து வர கண்டேன்
விதைகளை கிழித்து செடி முளைக்கும்
அன்பே விதிகளை உடைத்து உன்னை மணப்பேன்

சதை கொண்ட மயக்கம்.. களிந்த பின்னே
சத்தியதின் நிழலில் குடி இருப்பேன்
காதலி உதறிய தாவணி பறந்து.. வானனில் ஆனதென்ன

காதலன் சிதறிய பேனா மய்யில்.. வானம் தோன்றியதென்ன
நூற்றான்ராய் நீழும் முத்தங்கள் வேண்டும்
வா கண்ணே வாங்கி கொள்ளேன்

ஹே ஹே ஷா கி பா… ஹே ஹே ஷா கி பா…
ஹே ஹே ஷா கி பா… ஹே எஹ் ஹே எஹ் ஹே எஹ்

காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்
அதை நான் வாங்கி.. கவிதை செய்து கொண்டேன்

கண்களை தொலைத்து விட்டு கைகலால் துலாவி வந்தேன்
ஓ மண்ணிலே கிடந்த கண்ணை.. இன்றுதான் அறிந்து கொண்டேன்
உன் கண்ணில் தான்… கண் விழிப்பேன்..

ஹே ஹே சிநேகிதா ஹே ஹே சிநேகிதா ஹே ஹே சிநேகிதா…

Movie: Varalaru
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman

Leave a Reply