Lyricist Viveka

இவள் தானா பாடல் வரிகள்

கண்ணும் கண்ணும் தூரிக்கொள் வெக்கம் கரை மீறிச் செல்ல
அக்கம் பக்கம் யாரும் இல்ல அய்யய்யோ என்னாகுமோ
நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக்கொள்ள அச்சம் மட்டும் விட்டுத் தள்ள
சொல்ல ஒரு வார்த்தை இல்ல அய்யய்யோ என்னாகுமோ 

கண்ணும் கண்ணும் தூரிக்கொள் வெக்கம் கரை மீறிச் செல்ல
அக்கம் பக்கம் யாரும் இல்ல அய்யய்யோ என்னாகுமோ
நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக்கொள்ள அச்சம் மட்டும் விட்டுத் தள்ள
சொல்ல ஒரு வார்த்தை இல்ல அய்யய்யோ என்னாகுமோ

அந்த வானவில்லின் பாதி வெண்ணிலவின் மீதி
பெண்ணுருவில் வந்தாளே இவள் தானா இவள் தானா

மழை மின்னலென மோதி மந்திரங்கள் ஓதி
என் கனவை வென்றானே இவன் தானா இவன் தானா

போட்டி போட்டு என் விழி ரெண்டும்
உன்னை பார்க்க முந்திச் செல்லும்
இமைகள் கூட எதிரில் நீ வந்தால் சுமைகள் ஆகுதே ஓ
இவள்தானா ஓ இவள்தானா

கண்ணும் கண்ணும் தூரிக்கொள் வெக்கம் கரை மீறிச் செல்ல
அக்கம் பக்கம் யாரும் இல்ல அய்யய்யோ என்னாகுமோ
நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக்கொள்ள அச்சம் மட்டும் விட்டுத் தள்ள
சொல்ல ஒரு வார்த்தை இல்ல அய்யய்யோ என்னாகுமோ 

வினா வினா ஆயிரம் அதன் விடை எல்லாம் உன் விழியிலே
விடை விடை முடிவிலே பல வினா வந்தால் அது காதலே

தனியே நீ வீதியிலே நடந்தால் அது பேரழகு
ஒரு பூ கூர்த்த நூலாக தெருவே அங்கு தெரிகிறது

காய்ச்சல் வந்து நீச்சல் போடும் ஆறாய் மாறினேன்
இவன் தானா இவன் தானா

குடை குடை ஏந்தியே வரும் மழை ஒன்றை இங்கு பார்க்கிறேன்
இவள் இல்லா வாழ்க்கையே ஒரு பிழை என்று நான் உணர்கிறேன்

அடடா உன் கண் அசைவும் அதிரா உன் புன்னகையும்
உடலின் என் உயிர் பிசையும் உடலில் ஒரு பேர் அசையும்

காற்றில் போட்ட கோலம் போலே நேற்றை மறக்கிறேன்
இவள் தானா ஓ இவள் தானா. 

கண்ணும் கண்ணும் தூரிக்கொள் வெக்கம் கரை மீறிச் செல்ல
அக்கம் பக்கம் யாரும் இல்ல அய்யய்யோ என்னாகுமோ
நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக்கொள்ள அச்சம் மட்டும் விட்டுத் தள்ள
சொல்ல ஒரு வார்த்தை இல்ல அய்யய்யோ என்னாகுமோ… 

Movie: Veeram
Lyrics: Viveka
Music: Devi Sri Prasad

Leave a Reply