Movie: Dharma Seelan (1993)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: இருப்பதை ஏன் மறைத்து வைத்தாய் ஆண்டவா ஆஆ..

ஆண்: இருப்பதை ஏன் மறைத்து வைத்தாய் ஆண்டவா ஆஆ… மறைத்ததை ஏன் தெரிய வைத்தாய் ஆண்டவா என்ன உந்தன் கணக்கு இன்னும் சொந்தம் என்ன எனக்கு மனம் போல் நடத்து நடத்து..

ஆண்: இருப்பதை ஏன் மறைத்து வைத்தாய் ஆண்டவா ஆஆ… மறைத்ததை ஏன் தெரிய வைத்தாய் ஆண்டவா

ஆண்: அன்னை ஒரு தெய்வம் என்று ஊரு சொல்லும் தாயே உண்மை இல்லை சொன்னதென்று ஆக்கலாமோ நீயே

ஆண்: வெண்ணிலவை காட்டி வைத்து சோறு தந்ததுண்டா தோளில் ஒரு தூளியிட்டு பாட்டு சொன்னதுண்டா

ஆண்: ஐயிரண்டு மாதத்தோடு உந்தன் பாரம் போச்சு எந்தன் ஆவி கூட என்றும் ஜென்ம பாரம் ஆச்சு இந்த சோகமும்.. துன்ப ராகமும்.. ஆற்றிடவும் தேற்றிடவும் யாரோ.. யாரோ… என் கண்களில் நீரோ..

ஆண்: இருப்பதை ஏன் மறைத்து வைத்தாய் ஆண்டவா ஆஆ… மறைத்ததை ஏன் தெரிய வைத்தாய் ஆண்டவா என்ன உந்தன் கணக்கு இன்னும் சொந்தம் என்ன எனக்கு மனம் போல் நடத்து நடத்து..

ஆண்: இருப்பதை ஏன் மறைத்து வைத்தாய் ஆண்டவா ஆஆ… மறைத்ததை ஏன் தெரிய வைத்தாய் ஆண்டவா