இரு விழியோ பாடல் வரிகள்

இரு விழியோ சிறகடிக்கும் இரு விழியோ சிறகடிக்கும்
இமைகளிலோ வெடிவெடிக்கும்
இதயத்திலே ஒரு கனவு உதயத்திலே வடம் பிடிக்கும்
காதல் நாள் தானே

மணல்வெளிப் போல கிடக்கிற ஆசை
மழை துளிப் போல குதிக்கிற நாளை
விளக்கொளிப் போல துடிக்கிற நெஞ்சில்
விசைத்தறிப் போல அடிக்கிற நாளை

நானும் இந்தத் தேதி அடி காதல் தின்ற மீதி
தோழி நீயும் வாடி இரு தோளும் தானே தூளி

இரு விழியோ சிறகடிக்கும் இமைகளிலோ வெடிவெடிக்கும்
இதயத்திலே ஒரு கனவு உதயத்திலே வடம் பிடிக்கும்
காதல் நாள் தானே

ஒரு பாறை மெல்ல மெழுகானதென்ன
உன்னை கண்ட வேலை உயிர் பூத்ததென்ன
மழையாய் விழுந்தாய்

மூக்குத்திப் போலே ஆடாத நெஞ்சு
நீ பார்த்தாலே தோதாச்சு இன்று புயலாய் ஆனாயேன்

சங்கில் ஓசைப் போலே உன்னில் தங்கிக் கொள்ள ஆசை
மின்னல் போல கண்ணில் உந்தன் பிம்பம் பூக்கும் ஓசை
உயிரோடு உயிர் பேச அடிக் காதல் தானே பாஷை இது வரமா

வரங்களில் ஏங்கி கிரங்கிடும் தேகம்
கரங்களில் தேங்கி உறங்கிடும் மாயம்

வெறும் சுகமா சுகங்களைத் தேடும் இடங்களில் ஓரம்
படங்களைப் போடும் நகங்களின் சாயம்

இரு விழியோ சிறகடிக்கும் இமைகளிலோ வெடிவெடிக்கும்
இதயத்திலே ஒரு கனவு உதயத்திலே வடம் பிடிக்கும்
காதல் நாள் தானே

கதை பேசிக் கொள்ள இதழ் தீயை தூண்டு
அலை பேசிப் போல காதோரம் சீண்டு மூனாம்பால் ஆவேனே

இவள் கொண்ட மேனி மலையாளச் சோலை
இதழாலே தொட்டால் மருதாணிச் சாலை சிவந்தே போனேனே

உறங்கும் எனது கனவு அதில் உனது பெயரில் களவு
மயங்குமெனது இரவு உந்தன் மனது பார்க்கும் உளவு

இதைக் காண வருமோடி ஒரு கோடி வான நிலவு இது குளிரா
குளிர்கிற நேரம் குறைகிற தேகம்

இருவரின் நெஞ்சில் சமுத்திரத் தாகம் இளங்கதிரா
இளங்கதிர் வந்து உரசிடும் காலம் இவர்களின் இரவு உறங்கிடும் நேரம்

இரு விழியோ சிறகடிக்கும் இமைகளிலோ வெடிவெடிக்கும்
இதயத்திலே ஒரு கனவு உதயத்திலே வடம் பிடிக்கும்
காதல் நாள் தானே

மணல்வெளிப் போல கிடக்கிற ஆசை மழை
துளிப் போல குதிக்கிற நாளை விளக்கொளிப் போல
துடிக்கிற நெஞ்சில் விசைத்தறிப் போல அடிக்கிற நாளை…

Movie: Pirivom Santhippom
Lyrics: Jayantha
Music: Vidyasagar