Kavingar Kalidasan

கருடா கருடா என் காதலை பாடல் வரிகள்

கருடா கருடா, என் காதலைச் சொல்லிவிடு..
திருடா திருடா, என் இதையத்தைத் திருப்பிக் கொடு..

கருடா கருடா, என் காதலைச் சொல்லிவிடு..
திருடா திருடா, என் இதையத்தைத் திருப்பிக் கொடு..

அட உன் மனம் ரகசியப் புயலா? விரல் வெயிலா?
நீ தொடுகையில் கொதிக்குது..
கண்களில் இருப்பது சரியா? வரை முறையா?
உடல் இருபுறம் சிவக்குது..

யாயி யார் யாரோ..
இது காதல் ஆராரோ..
யாயி யார் யாரோ..
இது காதல் ஆராரோ..

கருடா கருடா, என் காதலைச் சொல்லிவிடு..
திருடா திருடா, என் இதையத்தைத் திருப்பிக் கொடு..

மனமோகினி என் மடியில் வந்தால்,
அடி சுகம் காணும் உன் தாவணி..
என் கூட்டணி அதில் இணைந்தாலே நீ,
நம் பிள்ளைகள் வரும் பேரணி..

எப்போதுமே அட என்மீது நீ,
இறை கைவைத்து செய்யும்பணி..
இன்ப கனவுக்குள்ளே என்னைச் சிறை வைத்திடும்,
அந்தக் கலையில் நீ கலைமாமணி..

உண்ணாத உணவுக்குச் சுவையேதம்மா..?
கண்ணோடு இமை சேரத் தடை ஏனம்மா..?

முள்ளொன்று இல்லாமல் கடிகாரமா..?
கல்யாணம் செய்யும் முன் அதிகாரமா..?

ஆரணி.. பட்டு நீயணி..
நம் கல்யாணம்தானே இனி..

கருடா கருடா, என் காதலைச் சொல்லிவிடு..
திருடா திருடா, என் இதையத்தைத் திருப்பிக் கொடு..

செய்கூலியும் இல்லை,
சேதாரமும் இல்லை,
கோலாரு தங்கம் இது..
கை வைத்துப் பார்,
இந்தப் பெண்ணுக்குள்ளே,
அட பொய்யான பாகம் இது..

கண்ணே உனை,
இங்கு எண்ணாத நாள்,
நான் உண்ணாத நாள் அல்லவா..?
அன்பே அன்பே,
உன் அங்கம் எங்கும்,
என் அடையாளப் பொறி போடவா..?

தீராத சந்தேகம் உன் தாகமா..?
ஆராய்ச்சி செய்யத்தான் என் தேகமா..?

இல்லாத சொல்லுக்குப் பொருள் ஏதம்மா..?
என் ஆசை முத்தத்தில் முடிவேதம்மா..?

பூங்கிளி உன் பூங்கிளி..
இந்தப் பூவுக்குள் பன்னீர் தெளி..

கருடா கருடா, என் காதலைச் சொல்லிவிடு..
திருடா திருடா, என் இதையத்தைத் திருப்பிக் கொடு..

அடி உன் மனம் ரகசியப் புயலா? விரல் வெயிலா?
நீ தொடுகையில் கொதிக்குது..
கண்களில் இருப்பது சரியா? வரை முறையா?
உடல் இருபுறம் சிவக்குது..

யாயி யார் யாரோ..
இது காதல் ஆராரோ..
யாயி யார் யாரோ..
இது காதல் ஆராரோ..

கருடா.. கருடா..
கருடா.. கருடா..

Movie: Natpukkaga
Lyrics: Kavingar Kalidasan
Music: Deva