என்னை தாலாட்ட வருவாளோ பாடல் வரிகள்
என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளோ
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளோ
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே.
என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ
பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள் நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா வழியோரம் விழி வைக்கிரேன்
எனது இரவு அவள் கூந்தலில் எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில் கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீரூற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்
என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளோ
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளோ
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே.
என்னை தாலாட்ட வருவாளோ… நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ…
தங்க தேராட்டம் வருவாளோ… இல்லை ஏமாற்றம் தருவாளோ…