என்ன மறந்த பொழுதும் பாடல் வரிகள்
என்ன மறந்த பொழுதும் நான் உன்ன மறக்கவில்லையே
என்ன மறந்த பொழுதும் நான் உன்ன மறக்கவில்லையே
கண்ணு உறங்கும் பொழுதும்
உன் எண்ணம் உறங்கவில்லையே
என் ராஜாதி ராஜன் இருந்தா
நான் வேறேதும் கேக்கவில்லையே
என் மாமா என் பக்கம் இருந்தா
இனி வேறேதும் தேவை இல்லையே…….
என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே
ஓஓஹோ ஒஓஹோ ஓஓஹோ ஒஓஹோ
ஓஓஒ ஓஓ ஒஓஹோ
உன் மேல ஆச வச்சு உள்ளுக்குள்ள பாசம் வச்சு
ஆளான அன்னக்கிளி நான்…..
பூ மால கோத்து வச்சு போட ஒரு வேள வச்சு
போடாம காத்திருக்கேன் நான்…..
வேண்டாத சாமி இல்ல வேற வழி தோணவில்ல
ஏங்காம ஏங்கி நின்னேன் நான்
போடாத வேலி ஒண்ணு போட்டு வெச்ச நேரம் ஒண்ணு
பாடாத சோகம் ஒண்ணு பாடி வரும் பொண்ணு ஒண்ணு
என் ராகம் கேட்கவில்லையா மாமா இன்று
ஏதாச்சும் வார்த்த சொல்லய்யா
என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே
பொன்னான கூண்டுக்குள்ள பூட்டி வெச்ச பச்சக் கிளி
கண்ணீரு விட்டுக் கலங்கும்……ம்ம்ம்…
கண்ணான மாமன் எண்ணம் காட்டாறு போல வந்து
எப்போதும் தொட்டு இழுக்கும்….ம்ம்ம்…
உன்ன எண்ணி நித்தம் நித்தம்
ஓடுதையா பாட்டுச் சத்தம்
பொண்ணோட நெஞ்சம் மயங்கும்
ஒத்தையில பூங்கொலுசு தத்தளிச்சு தாளம் தட்ட
மெத்தையில செண்பகப்பூ
பாட்டுக்குள்ள சோகம் தட்ட பாடாம பாடும் குயில் நான்
மாமா உன்ன கூடாம வாடும் மயில் நான்
என்ன மறந்த பொழுதும் நான் உன்ன மறக்கவில்லையே
என் ராசாத்தி பக்கம் இருந்தா
இனி வேறேதும் தேவை இல்லையே……
என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே…
Movie: Pandithurai
Lyrics: Vaali
Music: Ilayaraja