Lyricist Vaali

எங்கேயோ திக்கு திசை பாடல் வரிகள்

எங்கேயோ திக்கு திசை காணாத தூரம்தான்
அம்மாடி வந்ததென்ன என் வாழ்கை ஓடம்தான்

காவேரி தீரம் விட்டு கால்கள் வந்ததடி
காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி

கைமாறி நான் வளர்த்த பச்சைக்கிளி போனது
கண்ணார நானும்காண இத்தனை நாள் ஆனது

இரு கண்ணே செந்தமிழ்த்தேனே தந்தையின் பாசம் வென்றதடி
பசும் பொன்னே செவ்வந்திப்பூவே இத்துடன் சோகம் சென்றதடி

நான் கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது
அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது

சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது
இந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது…

Movie: Mahanadhi
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja