Lyricist Pulamaipithan

எங்கெங்கோ கால்கள் செல்லும் பாடல் வரிகள்

எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்

உன் சொந்தம் இங்கு யார் யாரோ நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு

எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்

காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வாராதே
பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்று அப்போதே

எதனை கொண்டு நாம் வந்தோம் எதனை கொண்டு போகின்றோம்
ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே

எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்

காற்றுக்கு யார் இங்கே பாட்டு சொல்லி தந்தாரோ
ஆற்றுக்கு யார் இங்கே பாதை போட்டு தந்தாரோ

வாழ்க்கை எங்கு போய் சேரும் காலம் செய்யும் தீர்மானம்
என்னை உன்னை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது

எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்

உன் சொந்தம் இங்கு யார் யாரோ நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு…

Movie: Nandha
Lyrics: Pulamaipithan
Music: Yuvan Shankar Raja

Leave a Reply