Lyricist Na. Muthukumar

எங்கே இருந்தாய் பாடல் வரிகள்

எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய் 
எப்படி நீயும் என்னுள் வந்தாய் 
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய் 
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்

உன்னை பார்க்கும் முன்பு நான் காகிதத்தின் வெண்மையடி 
உன்னை பார்த்த பின்பு நான் வானவில்லின் வண்ணமடி 
தோளில் சாயும் போது தோழி நீயடி 
மடியில் சாயும் போது தாயும் நீயடி

எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய் 
எப்படி நீயும் என்னுள் வந்தாய் 
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய் 
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்

என் வீட்டு தோட்டத்தில் பூக்கின்ற பூவெல்லாம் 
பறிக்கத்தான் ஆள் இன்றி செடியில் உதிருமடி 
உன்னை நான் பார்த்தவுடன் உனக்காக ஆசையுடன் 
கை விரல்கள் கேட்காமல் பறித்திட போகுதடி

என் இதயம் முழுதும் விதையாய் விழுந்தாய் 
வெறும் விதை என்று விட்டு விட்டு சென்றாய் 
விருட்சத்தை போல நீ வளர்ந்து நின்றாய் 
தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும்நீயடி

எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய் 
எப்படி நீயும் என்னுள் வந்தாய் 
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய் 
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்

என் பெயரை கேட்டாலே உன் பெயரை சொல்கின்றேன்
எப்போதும் என் நினைவு உன்னை சுற்றுதடி
எதிரே யார் வந்தாலும் நீயென்று குழம்புகிறேன்
உன்னாலே என் மனதில் மின்னல் வெட்டுதடி

உயிரில்…. கலந்தாய்…..
உணர்வில்….. நுழைந்தாய்…..
எந்தன் வீடு என்று என்னை விட்டு விட்டு சென்று
உந்தன் பின் வந்து தொடர்கிறதே

தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும் நீயடி

எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்

கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
உன்னை பார்க்கும் முன்பு நான் காகிதத்தில் வெண்மையடி 
உன்னை பார்த்த பின்பு நான் பால்நிலவின் வண்ணமடி

தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும் நீயடி…

Movie: Thenavattu
Lyrics: Na. Muthukumar
Music: Srikanth Deva

Leave a Reply