Lyricist Vairamuthu

எந்தப்பக்கம் காணும்போதும் பாடல் வரிகள்

எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு
சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வதுண்டு

அட ரோஜாப்பூக்கள் அழுதால் அது தேனை சிந்தும்
என் ராஜாபையன் நீ அழுதால் அதில் யானம் மிஞ்சும்
உன் சோகம் ஒரு மேகம் நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீர் ஏந்தும் கண்ணம் நான் ஆகும்

எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு

எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமே ஏது
எப்போதுமே பகலாய் போனால் வெப்பம் தாங்காதே
மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் நதிதான்

உன் உயிரை சலவை செய்ய ஒரு காதல் நதி உண்டு
உன் சுவாசப்பையை மாற்று அதில் சுத்தக்காற்றை ஏற்று
நீ இன்னோர் உயிரில் இன்னோர் பெயரில் வாழ்ந்துவிடு…… ஓ…

ஹோ…… ஹோ…… ஹோ……

சந்தர்ப்பமே தீமை செய்தால் சந்தோஷமே ஏது
சல்லடையில் தண்ணீர் அள்ளி தாகம் தீராது
தாகம் தீரத்தானோ நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய்
நம் உறவின் பெயரே தெரியாதம்மா

உயிரைத் தருகின்றாய் உன் உச்சந்தலையைத் தீண்ட
ஓர் உரிமை உண்டா பெண்ணே
உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால் போதும் கண்ணே…
ஓ……… ஓ………… ஹோ………

எந்தப்பக்கம் காணும்போதும்
வானம் ஒன்று நீ எந்தப்பாதை
ஏகும்போதும் ஊா்கள் உண்டு

நீ தாவி தாவி தவழும்போதும் தாய்மை உண்டு நான் நெஞ்சாங்கூட்டில்
சாயும்போதும் நோ்மை உண்டு உன்
வாா்த்தைக்கு முன்னால் என் வாழ்வே
உன் பின்னால் உன் மடியில் எந்தன் கண்ணீா் வழியுமடி

உன் சோகம் ஒரு மேகம்
நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீா் ஏந்தும் கன்னம் நான் ஆகும்…

Movie: Dharma Durai
Lyrics: Vairamuthu
Music: Yuvan Shankar Raja