Lyricist Pa.Vijay

என் ஜன்னல் நிலவுக்கு பாடல் வரிகள்

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு

கண்கள் ரெண்டை உருட்டி
மிரட்டி கொஞ்சுகின்ற அழகே

குங்குமத்தில் புரட்டி எடுத்த குண்டுமல்லிச் சரமே
மந்தமாருதம் உந்தன் மேனியில் பூத்திருக்கு

உன் ஜன்னல் நிலவிங்கு வந்தாச்சு
உன் கண்ணில் பட்டு விட்டு  நின்னாச்சு

கண்கள் ரெண்டை உருட்டி
மிரட்டி கொஞ்சுகின்ற அழகா

குங்குமத்தில் புரட்டி எடுத்த குண்டுமல்லிச் சரமா
மந்தமாருதம் எந்தன் மேனியில் பூத்திருக்கு

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
 உன் கண்ணில் பட்டு விட்டு நின்னாச்சு

எத்தனை மச்சம் உன்னிடம் உண்டு
காத்துக்கும் எனக்கும் தான் அது தெரியும்

எத்தனை வேகம் உன்னிடம் உண்டு
இருட்டுக்கும் எனக்கும் தான் அது புரியும்

கச்சை கட்டி பூ பூத்த பூந்தோட்டமே
உச்சி வரை நான் மூழ்க தேன் பாய்ச்சுமே

பத்து விரல் போதாது உன் மோகமே
லட்ச விரல் நீ கொண்டு வா வானமே

என் முத்து மணிச் சுடர் முல்லை மலர்த் திடல் 
நாணுவதேன்

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு

முக்கனி அதில் முக்கியம் கொண்ட
முதல் கனி முதல் கனி பார்த்து விட்டேன்
பத்தினிப் பெண்ணின் பத்தியம் தேட
ஓரிடம் ஓரிடம் வேர்த்து விட்டேன்

பூர்வ ஜென்ம ஓர் பந்தம் நீ வந்தது
என்றும் இனி நீங்காது நாம் சேர்ந்தது

தன்னந்தனி தீவாக நான் வாழ்ந்தது
என்னைச் சுற்றி உன் கைகள் பூ போட்டது

உன் வெள்ளை மனசிலும்
வெட்கச் சிரிப்பிலும் வாழ்ந்திருப்பேன்

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு

கண்கள் ரெண்டை உருட்டி
மிரட்டி கொஞ்சுகின்ற அழகா 

குங்குமத்தில் புரட்டி எடுத்த குண்டுமல்லிச் சரமா
மந்தமாருதம் உந்தன் மேனியில் பூத்திருக்கு

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு

உன் ஜன்னல் நிலவிங்கு வந்தாச்சு
உன் கண்ணில் பட்டு விட்டு  நின்னாச்சு…

Movie: Chokka Thangam
Lyrics: Pa. Vijay
Music: Deva

Leave a Reply