Lyricist Yugabharathi

எளந்தாரி பாடல் வரிகள்

எளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்
உனப் பாத்தா மல்லு கட்டத் தோணும்
ஒதுங்காம ஒத்துக் கொள்ளு போதும்

வெரசா தொடவா முழுசா கெடவா
நெருங்காம தூர நின்னே நெல்லு குத்தாத

எளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்
உனப் பாத்தா மல்லு கட்டத் தோணும்
ஒதுங்காம ஒத்துக் கொள்ளு போதும்

ஒன்ன எனக்கு ரொம்பப் புடிக்கும் சொல்லுறத கேளு
கண்ணு முழிச்சா ஒன்ன நெனச்சு சுத்துது என் காலு

கொத்துக் கறி போல நீயும் ஏன் என்ன கொட சாய்க்குற
வெக்கயில தூரல் மாதிரி நெக்குருகப் பாக்குற
கருவாட்டப் பாத்தா வட்டம் போடும் காக்க

அது போல நானே ஒன்ன சேரும் வாழ்க்க
மனசால என நீயும் மஞ்சக் குளிக்க வையி

எளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்

நெஞ்ச பொளந்து உள்ள இருக்கும் ஒன்ன நிதம் பாப்பேன்
உச்சந்தலையில் அம்மி அரைக்கும் முத்தம் இடக் கேப்பேன்
மெத்தையில தூங்கிடாம நீ வித்தைகள காட்டிடு

கையில் உள்ள ரேகை தேயணும் கட்டிக் கொள்ள பாத்திடு
உனக்காகத் தானே உப்பு புளி காரம்
ஒதுக்காம வாங்கி திங்குது என் தேகம்
தலவாழ எல போட்டு தண்ணி தெளிச்சு வையி

எளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்
வெரசா தொடவா முழுசா கெடவா
நெருங்காம தூர நின்னே நெல்லு குத்தாத

எளந்தாரி ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் தருவேனே.. 
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் எளந்தாரி…

Movie: Maaveeran Kittu
Lyrics: Yugabharathi
Music: D. Imman

Leave a Reply