செல்லகிளியோ பாடல் வரிகள்
ஆஆ… ஆஆ …… ஆஅ… ஆஆ… ஆஅ… ஆ…
செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே
என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே.
ஓஒ……ஹோ…… ஓஒ……ஹோ…
ஏய் ஒத்தைக்கிளியே என் மெத்தைக்கிளியே
நீ தூக்கம் கெட்டு கண்ணீர் விட்டு துக்கம் கொள்ளாதே
ஏய் ஒத்தைக்கிளியே என் மெத்தைக்கிளியே
அடி பூமி பந்தில் துளைகள் போட்டு
விடியும் முன்னே கூட்டி செல்வேன்
செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே
என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே
ஏஹே ஏஹே ஹே ஹே ஏஹே ஏஹே ஹே ஹே
ஓ….திட்டு திட்டாய் கெட்டி பட்டது பவள செவ்வாய்
விட்ட இடத்தில் முத்தம் மீண்டும் தொடர செய்வாய்
மரத்து போன பாகம் எல்லாம் மலர செய்வாய்
நம்ம கட்டில் சூடு ஹோய் ஹோய்
இப்போ ஆறி போச்சு ஹோய் ஹோய்
நாம் சிக்கி முக்கி கல்லாய் மாறி பற்ற செய்வோமா
என் சோகம் போக ஹோய் ஹோய்
என் மோகம் தீர ஹோய் ஹோய்
அட ரெட்டை சேவை செய்ய போகும்
கெட்டிக்காரா கிட்ட வா வா
செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ள ஓஒ ஓஓ
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ள
ஓ…என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே
மனசு இல்ல மச்சி துணியாக சச்சி
மனசுல வச்சி மருகுது பட்சி
ஒட்டிகொண்டு ஒட்டிக்கொண்டு உருகி போவோம்
உடை இல்லாத பகலை போல இரவை செய்வோம்
ஒன்றும் ஒன்றும் ஒன்று என்று பூரணம் ஆவோம்
இனி ஒவ்வொரு இரவு ம்ம்ம் ம்ம்
முதல் இரவாய் செய்வோம் ம்ம்ம் ம்ம்
அடி சூரியனுக்கே சுவரை கட்டி இரவை நீட்டிப்போம்
இரு நதியை போலே நாம் தழுவி கொள்வோம்
நாம் தழுவும் போது சிதறும் துளியில்
விண்மீன் எல்லாம் வளைய செய்வோம்
செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே
நீ என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே
ஓ ஓ ஒத்தைக்கிளியே என் மெத்தைக்கிளியே
நீ தூக்கம் கெட்டு கண்ணீர் விட்டு துக்கம் கொள்ளாதே
ஏய் ஒத்தைக்கிளியே ஓ….மெத்தைக்கிளியே
அடி பூமி பந்தில் துளைகள் போட்டு
விடியும் முன்னே கூட்டி செல்வேன்
ஆஆ… ஆஅ… ஆஅ… ஓஒ… ஓஒ… ஓஒ…
ம்ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்ம்…
Movie: Chellamae
Lyrics: Vairamuthu
Music: Harris Jayaraj