Lyricist Vairamuthu

அண்ணா சாலையில் பாடல் வரிகள்

அண்ணா சாலையில் சென்னை அண்ணா சாலையில்
ஒரு எட்டு வண்ண வானவில்லை பார்த்தேன் 
எட்டி பிடிக்க விண்ணை முட்டி பறந்தேன் 
அது மழை பட்டு கரைந்திட வேர்த்தேன்

வா வா வானவில் தேடி நா நான் அலைகின்ற நேரம் 
ஹையோ தேடி சென்ற வானவில்லே நேரில் வந்ததே

அண்ணா சாலையில் சென்னை அண்ணா சாலையில்
ஒரு எட்டு வண்ண வானவில்லை பார்த்தேன் 
எட்டி பிடிக்க விண்ணை முட்டி பறந்தேன் 
அது மழை பட்டு கரைந்திட வேர்த்தேன்

ஆயிரம் ஆண்டுகள் தொழில் நுட்பம் பழகி
ஆண்டவன் படைத்தான் அசத்திடும் அழகி
கண்கள் பார்த்ததும் கொஞ்சம் அது மூன்றே சத விகிதம் 
தொன்னூத்தேழும் பார்த்தால் உயிர் போகும் சத விகிதம்

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொன்று அழகு 
நான் கண்ட பெண்ணுக்கு ஒவ்வொன்றுமே அழகு 
வான் கொண்ட நிலவுக்கு முகம் மட்டும் வெளிச்சம் 
நான் கண்ட பெண்ணுக்கு நிழல் கூட வெளிச்சம்

அவள் வாழும் வீதிக்கு இரவே இல்லை இல்லை
அவள் என்னை பாக்கட்டும் மரணம் இல்லை

அண்ணா சாலையில் சென்னை அண்ணா சாலையில்
ஒரு எட்டு வண்ண வானவில்லை பார்த்தேன் 
ஆஹா ஆஆ எட்டி பிடிக்க விண்ணை முட்டி பறந்தேன் 
அது மழை பட்டு கரைந்திட வேர்த்தேன்

லாலா லா லா லலா லால் லாலா லா லா லலா 
லால் லாலா லா லா லாலா லாலா லாலா
லாலல லா லாஆஆ லாலல லா லாஆஆ 
லாலா லா லாஆஆ லாலா லா லா லாலா 
லால் லாலா லா லா லாலா 
லால் லாலா லா லா லாலா லாலா லாலா

விண்வெளியில் ரெண்டு நட்சத்திரம் பறித்து
செண்பகபூ ஒன்று அதை மெல்ல துடைத்து
அடடா அடடா அடடா அவள் விழிகள் செய்தானோ 
உருளும் விழிகள் கொண்டு இவன் உயிரை கொய்தானோ

சரி சொன்னால் அவள் மனசுக்குள் இருப்பேன்
இல்லை என்றால் அவள் கொலுசுக்குள் கிடப்பேன்
சுற்றும் விண்ணில் ஒன்று பாவையின் உள்ளத்தில்
இன்னும் ஒன்று அவள் பாதத்தின் பள்ளத்தில்

அவளை போல் பெண்ணொருத்தி பூமிக்கில்லை இல்லை
இனிமேலும் படைக்கும் எண்ணம் சாமிக்கு இல்லை

அண்ணா சாலையில் சென்னை அண்ணா சாலையில்
ஒரு எட்டு வண்ண வானவில்லை பார்த்தேன் யே … 
எட்டி பிடிக்க விண்ணை முட்டி பறந்தேன் 
அது மழை பட்டு கரைந்திட வேர்த்தேன்

வா வா வானவில் தேடி நா நான் அலைகின்ற நேரம் 
ஹையோ தேடி சென்ற வானவில்லே நேரில் வந்ததே…

Movie: Roja Kootam
Lyrics: Vairamuthu
Music: Bharadwaj

Leave a Reply