Lyricist Ilaiyaraaja

அம்மா சொன்ன ஆரிரரோ பாடல் வரிகள்

சின்ன உயிரின் உடல்வளர மடி தந்து
கண்ணின் மணிபோல் காக்கத் தனைத்தந்து
அன்பின் உருவாய் மண்ணில் இருப்பது யார் அம்மா…அம்மா…

அம்மா சொன்ன ஆரிரரோ சொன்னேன்
உனக்குத் தூளி கட்டி பூங்கொடி
ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும் மாஞ்செடி பூந்தேனடி

அம்மா சொன்ன ஆரிரரோ
சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி
ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும்
மாஞ்செடி பூந்தேனடி

வீணை என்ன குழலும் என்ன கொஞ்சும் பிள்ளை முன்னே
தேனும் என்ன பாகும் என்ன
அன்னை அன்பின் முன்னே ஹோய்…

அம்மா சொன்ன ஆரிரரோ சொன்னேன் உனக்குத் தூளி கட்டி
பூங்கொடி ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும் மாஞ்செடி பூந்தேனடி

காதல் சுமை கணவன் சுமை குடும்பச்சுமை தாங்குவாள்
காலமெல்லாம் கன்னியர்க்கு ஓய்வு உண்டோ…
சுமைகளெல்லாம் சுமப்பதிலே சுகமிருக்கும் பெண்ணுக்கு
சுகம் கொடுக்கும் பிள்ளைச்சுமை சொல்லிடவோ…

கைபிடித்த கணவன் கால்கள் பிடிப்பாள்
கண்மணிக்கு இமை போல காவல் இருப்பாள்
அன்னையென ஆனாள் தன் பிள்ளைக்கென குழைவாள்

அன்னையென ஆனாள்தன் பிள்ளைக்கென குழைவாள்
மண்ணில் உண்மையிலே உயர்ந்த
ஜென்மம் பெண் ஜென்மமே

அம்மா சொன்ன ஆரிரரோ
சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி
ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும்
மாஞ்செடி பூந்தேனடி

காற்றினிலே கலந்துவரும் கார் குயிலின் கானம்போல்
காதினிலே கேட்கும் பிள்ளைக் கனிமொழி..
தூண்டிலிட்டு இழுக்கும் அந்த தூய நிலா ஒளியைப்போல்
பேச்சு இன்றிப் பிடித்திழுக்கும் வண்ண விழி…

சிதறி வரும் சிரிப்பில் முத்துத் தெறிக்கும்..
சிரிக்கும் அந்த வெள்ளி மீன் உள்ளம் பறிக்கும்

ஏங்குதம்மா நெஞ்சம் ஏந்திக் கொண்டு பாட
ஏங்குதம்மா நெஞ்சம் ஏந்திக் கொண்டு பாட
கையில் என்று வரும் பிள்ளைநிலா நீ கூறடி….

அம்மா சொன்ன ஆரிரரோ சொன்னேன் உனக்குத் தூளி
கட்டி பூங்கொடி
ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும் மாஞ்செடி பூந்தேனடி

வீணை என்ன குழலும் என்ன கொஞ்சும் பிள்ளை முன்னே
தேனும் என்ன பாகும் என்ன அன்னை அன்பின் முன்னே ஹோய்…

அம்மா சொன்ன ஆரிரரோ
சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி
ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும்
மாஞ்செடி பூந்தேனடி…

Movie: Solla Marandha Kadhai
Lyrics: Ilayaraja
Music: Ilayaraja