Aalaana Naal Mudhala Song Lyrics

Movie: Kadhal Kavithai (1998)
Music: Ilayaraja
Lyricists: Agathiyan
Singers: Pushpavanam Kuppuswamy and Sowmya Raoh

Added Date: Feb 11, 2022

பெண்: மச்சான்.. ஆளான நாள் முதலா யாரையும் நெனச்சதில்ல மாமா நான் உங்களுக்கே வாக்கப்பட ஆச பட்டேன் வேணான்னு சொல்லுறீகளே சும்மா வெறும் வாய மெல்லுறீகளே ஆடியில கட்டிகிட்டா சித்திரைக்கு புள்ள வரும் ஆகாது ஆகாது மச்சானே இது தோதான தை மாசம் மச்சானே ஆகாது ஆகாது மச்சானே இது தோதான தை மாசம் மச்சானே

ஆண்: உன்ன நான் கட்டிக் கொள்ள எப்பவும் நெனச்சதில்ல கல்லக் கட்டி தண்ணிக்குள்ள முங்குறவன் யாரும் இல்ல வேணான்டி விட்டு விடடி நான் தவிச்சாக்கா தண்ணி குடுடி தாலி கட்டி கூடிகிட்டா சாமி குத்தம் ஆகுமுன்னு மேலூரு குறிகாரன் சொன்னான்டி அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி மேலூரு குறிகாரன் சொன்னான்டி அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி

பெண்: ஆளான நாள் முதலா யாரையும் நெனச்சதில்ல மாமா நான் உங்களுக்கே வாக்கப்பட ஆச பட்டேன்

பெண்: புல்லறுக்கப் போகையிலே புல்லநுனி தண்ணியில ஒம் முகத்த பாத்துபுட்டே வூடு வந்து சேந்து புட்டேன் ஏம் பாசம் தெரியாது மாமா
ஆண்: ஆஹா
பெண்: இது அனுமாரு நெஞ்சில்ல ராமா
ஆண்: ஆஹா
பெண்: எம் பாசம் தெரியாது மாமா இது அனுமாரு நெஞ்சில்ல ராமா

ஆண்: கொல்லையிலே மாங்கா மரம் கொத்து கொத்து காச்சிருக்கு காவக்காரன் தூங்கையிலே கைய எட்டி மாம்பழத்த அறியாம பறிச்சாத்தான் இனிக்கும் அடி அனில் பிள்ள கடிச்சாதான் ருசிக்கும் அறியாம பறிச்சாத்தான் இனிக்கும் அடி அனில் பிள்ள கடிச்சாதான் ருசிக்கும்

பெண்: பூவெடுத்து மால கட்டி ராசா நான் கூடு கட்டி குடியிருக்கேன் ராசா உன்ன நெனச்சே பொறந்தேன் வளந்தேன் ராசா என் ராசா

ஆண்: யம்மா உன்ன நான் கட்டிக் கொள்ள எப்பவும் நெனச்சதில்ல கல்லக் கட்டி தண்ணிக்குள்ள முங்குறவன் யாரும் இல்ல

ஆண்: காளக் கண்ணு வாங்கிக் கட்டி பால் கறக்க ஆச பட்டேன் கோழிக் குஞ்சு குட்டி போட கோயிலுக்கு நேந்துகிட்டேன் முட்டாளா இருக்கேடி மானே அடி ஒட்டாதே என் வாழ்க்க தானே ரொம்ப முட்டாளா இருக்கேடி மானே அடி ஒட்டாதே என் வாழ்க்க தானே

பெண்: ஆ ஹா ஒத்தைக்கொத்த சண்டையின்னா ஓடிப் போற ஆம்பள நீ செத்துப் போன பாம்ப பாத்தே சத்தம் போட்ட வீரனும் நீ
ஆண்: ஏ..ய்
பெண்: நீ மட்டும் சரி தானா மாமா
ஆண்: ஆ..
பெண்: என் நெனப்பத்தான் நீ பாரு மாமா
ஆண்: எஃகு ஏ
பெண்: நீ மட்டும் சரி தானா மாமா என் நெனப்பத் தான் நீ பாரு மாமா

ஆண்: ஒன் வாயக் கொஞ்சம் மூடிக்கடி வாரேன் நான் ஆம்பள தான் வீரத்த நீ பாரேன் நான் நெனச்சா மலைய வளைப்பேன் வாரேன் நான் வாரேன்

பெண்: மச்சான்.. ஆளான நாள் முதலா யாரையும் நெனச்சதில்ல

ஆண்: உன்ன நான் கட்டிக் கொள்ள எப்பவும் நெனச்சதில்ல

பெண்: வேணான்னு சொல்லுறீகளே

ஆண்: அடி வேணான்டி விட்டு விடடி தாலி கட்டி கூடிகிட்டா சாமி குத்தம் ஆகுமடி

பெண்: ஆகாது ஆகாது மச்சானே

ஆண்: அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி

பெண்: ஆகாது ஆகாது மச்சானே

ஆண்: அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி.