Lyricist Vaali

கண்ணே இன்று பாடல் வரிகள்

கண்ணே இன்று கல்யாண கதை கேளடி

கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி கேளடி
அன்பே இன்று பொன்னான திருநாளடி நாளடி

பன்னீர் பூவே வா வா செந்தேன் வேண்டும் தா தா
முத்துப் பல்லக்கிலே இந்த தத்தை ஆடி வர

கண்ணே இன்று கல்யாண கதை கேளடி கேளடி
அன்பே இன்று பொன்னான திருநாளடி நாளடி

கோடைக்கானல் சாரலில் ஆஅ……ஆஅ… ஆ….ஆ… ஆ… ஆ….
கோடைக்கானல் சாரலில் குறிஞ்சி ஒன்று ஆடுது
கூட வந்த காதலன் சூடிக் கொள்ளும் நாளிது

ஒவ்வொரு நாளும் காமதேவன் தேர் வரும்
ஓஹோ…ஹோ… உன்னுடன் நானும் போக வேண்டும்
ஊர்வலம் ஓஹோ…ஹோ…

உள்ளது யாவும் என்னை சேர்ந்த சீதனம் ஓஹோ….ஹோ…
அள்ளிட வேண்டும் ஆவல் தீர வாலிபம் ஓஹோ….ஹோ…

உன்னால் சின்ன சின்ன எண்ணமெல்லாம் அரங்கேறுமே
பொண்ணே தமிழ் பெண்ணே இன்று சொல்வாய் புது ராகமே

கண்ணே இன்று கல்யாண கதை கேளடி கேளடி
அன்பே இன்று பொன்னான திருநாளடி நாளடி

பன்னீர் பூவே வா வா செந்தேன் வேண்டும் தா தா
முத்துப் பல்லக்கிலே இந்த தத்தை ஆடி வர
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி கேளடி அன்பே இன்று

நீயில்லாத நாளெல்லாம் ஹா… ஆஅ……ஆஅ… ஆ… ஆ… ஆ…
நீயில்லாத நாளெல்லாம் நெரிஞ்சி முள்ளில் தூங்கினேன்
நீண்ட நேரம் ராவெல்லாம் நெருப்பு மூச்சு வாங்கினேன்

எத்தனை காலம் பாவம் இந்த தொல்லையோ ஓஹோ….ஹோ…
என்னிடம் கூற தோழி யாரும் இல்லையோ ஓஹோ… ஹோ….

என்றென்றும் என்னை நீங்கிடாமல் வாழ்ந்திடு ஓஹோ….ஹோ…
கற்பக சோலை காய்ந்திடாமல் நீர் விடு ஓஹோ… ஹோ…

வந்தேன் என்னை தந்தேன் உன்னை கொண்டேன் இது போதுமா
தொட்டால் விரல் பட்டால் நெஞ்சின் உள்ளே அலை மோதுமா…

கண்ணே இன்று கல்யாண கதை கேளடி கேளடி
அன்பே இன்று பொன்னான திருநாளடி நாளடி

பன்னீர் பூவே வா வா செந்தேன் வேண்டும் தா தா
முத்துப் பல்லக்கிலே இந்த தத்தை ஆடி வர

கண்ணே இன்று கல்யாண கதை கேளடி கேளடி
அன்பே இன்று பொன்னான திருநாளடி நாளடி…

Movie: Aanazhagan
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja