Lyricist Madhan Karky

ஏன் இங்கு வந்தான் பாடல் வரிகள்

ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான்
செல் என்று சொன்னேன் என்னுள்ளே சென்றான்..

உறங்கி கிடந்த புலன்களை எல்லாம் எழுப்பி விடுகின்றான்
சிறிது சிறிதாய் கிறக்கங்கள் எல்லாம் கிளப்பி விடுகின்றான்

பூவும் திறக்கும் நொடியின் முன்னே தேனை எடுக்கின்றான் ஓஹ் ஹோ ஹோ
காதல் பிறக்கும் நொடியின் முன்னே காமம் கொடுக்கின்றான்

ஏன் இங்கு வந்தான் ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான் பேசாதே என்றான்
ஓஓஹோ செல் என்று சொன்னேன்
செல் என்று சொன்னேன் என்னுள்ளே சென்றான் என்னுள்ளே சென்றான்

என் அழகை ரசிக்கிறான் ஓஓ ஹோ என் இளமை ருசிக்கிறான் ஓஓ ஹோ
என் இடையின் சரிவிலே  மழை துளியென உருள்கின்றான்

என் தோளினில் மெதுவாய் அமர்ந்தான் என் கோபத்தில் மதுவாய் சுவைத்தான்
என் கண்களின் சிவப்பினை அழகினில் ஏந்தி கன்னத்தில் பூசுகின்றான்

விடிய விடிய இரவினை வடித்தேன் குடிக்க செய்தானே ஓஓஹோ
கொடிய கொடிய வழிகளை கூட பிடிக்க செய்தானே

ஏன் இங்கு வந்தான் ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான் பேசாதே என்றான்
ஓஓஹோ செல் என்று சொன்னேன்
செல் என்று சொன்னேன் என்னுள்ளே சென்றான் என்னுள்ளே சென்றான்

நான் ஒளியில் நடக்கிறேன் ஓஓ ஹோ என் நிழலாய் தொடர்கிறான் ஓஓ ஹோ
என் விளக்கை அணைக்கிறேன் என் இருலென படர்கின்றான்

முன் அனுமதி இன்றி நுழைந்தான் என் அறையினில் எங்கும் நிறைந்தான்
இது முறை இல்லை என்றேன் வரையறை
இன்றி எனை அவன் சிறை பிடித்தான்

சிறையினுள்ளே சிறகுகள் தந்து பறக்க செய்தானே ஓஓஓஹோ
கனவும் நெனவும் தொடும் ஒரு இடத்தில் இருக்க செய்தானே

ஏன் இங்கு வந்தான் ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான் பேசாதே என்றான்
ஓஓஹோ செல் என்று சொன்னேன்
செல் என்று சொன்னேன் என்னுள்ளே சென்றான் என்னுள்ளே சென்றான்…

Movie: Meaghamann
Lyrics: Madhan Karky
Music: S. Thaman