Lyricist Pa.Vijay

காற்றே பூங்காற்றே பாடல் வரிகள்

காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா
தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா
வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா

காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா

நதி என்பது ஓர் நாள் கடல் என்பதை சேரும்
எப்போதுமே ஓடும் நதியாகலாம்
ரோஜா செடி போலே நீ பூக்கலாம் இங்கே
காற்றோடு போராடும் குணம் வேண்டுமே

அட உள்ளங்கையால் சூரியனை மூடிட முடியாதே
ஒரு பறவை மோதி கோபுரம் தான் சாய்ந்திட கூடாதே

தோழனே தோழனே ஓவியன் கை வலி சித்திரம் ஆகுது
ஒவ்வொரு வலியிலும் சாதனை உள்ளது

காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா

புயல் வீசுமே என்று கரை ஓரமாய் நின்று
அணை கட்டினால் அது ஓய்வதில்லை
மழை தூறுமே என்று நடுவானிலே வந்து
திரை கட்டினால் மழை முடிவதில்லை

எரிமலையின் மேலே தண்ணீர் ஊற்றி அணைத்திட முடியாது
ஒரு மின்னல் கீற்றை நூலில் கட்டி நிறுத்திட இயலாது

உன்னை யார் வெல்வது சிப்பியின் பொறுமை தான்
முத்து போல் மின்னுது இலைகளின் சக்தி தான் கனிகளை தாங்குது

காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா
தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா
வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா… 

Movie: Priyamaana Thozhi
Lyrics: Pa. Vijay
Music: S. A. Rajkumar